புதுச்சேரி: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது நாளாக கொரோனா கிருமி பாதிப்பு 900ஐ கடந்து, 989 பேருக்கு கிருமித்தொற்று உறுதியானதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நோய்த்தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கா மல் செயல்படுவோருக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்தல் பிரசாரத்தில் முகக் கவசம், தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, புதுச்சேரியில் கிருமிப்பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளைத் தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

