சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபு, கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டுவிட்டர் பதிவில் வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ள சந்தோஷ் பாபு, "சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் ஆளாக கிருமித்தொற்றால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.
"நான் எவ்வளவு அதிர்ஷ்டம் இல்லாதவன் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து உங்களது வாழ்த்துகளோடு வாக்குகளைச் சேகரிக்க விரும்பினேன். ஆனால், அந்த ஆசை நிராசையாகிவிட்டது.
"இருப்பினும், என் ஆதரவா ளர்கள் மக்களைச் சந்திப்பார்கள். தொழில்நுட்பங்கள் வழி பிரசாரத்தில் ஈடுபடுவேன். மநீமவுக்கும் எனக்கும் வாக்களியுங்கள்," என்று கேட்டுக்கொண்டார.

