குஷ்புவை எதிர்த்து அவரது ரசிகர் வைத்தியநாதன் போட்டி

குஷ்புவை எதிர்த்து அவரது ரசிகர் வைத்தியநாதன் போட்டி

2 mins read

சென்னை: குஷ்­பு­வுக்­காக அவ­ரது படங்­கள் ஒவ்­வொன்­றை­யும் குறைந்­தது 10 முறை­க­ளா­வது பார்க்­கும் அவ­ரது வெறித்­த­ன­மான ரசி­கர் ஒரு­வர் அம­முக வேட்­பா­ள­ராக குஷ்­புவை எதிர்த்து சென்னை ஆயி­ரம் விளக்­குத் தொகு­தி­யில் கள­மி­றங்­கி­யுள்­ளார்.

அவ­ரது ரசி­கர் என்­ப­தற்­காக அவ­ருக்கு வாக்­க­ளிக்க முடி­யுமா என்று கேள்வி எழுப்­பி­யுள்ள வைத்­தி­ய­நா­தன், "பொது­மக்­கள் எல்­லோ­ரும் குஷ்­பு­வின் படங்­க­ளைப் பார்த்து ரசிப்­பர்­கள். ஆனால், வாக்­ க­ளிக்க மாட்­டார்­கள்," என்­றார்.

'சின்­ன­தம்பி' படத்­தில் நடித்த பிர­புவே எங்­கள் பக்­கம்­தான் என்று கூறி­யுள்ள வைத்­தி­ய­நா­தன், "குஷ்­பு­விற்கு வாக்­க­ளித்­தால் அந்த வாக்­கு­களை எண்ணி முடிப்­ப­தற்­குள் அவர் வேறொரு கட்­சிக்குத் தாவி விடு­வார். எனவே மக்­கள் அவரை நம்­ப­மாட்­டார்­கள்," என்று மேலும் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, ஆயி­ரம் விளக்­குத் தொகு­தி­யில் தீவிரமாகப் பிர­சா­ரம் செய்து வரும் குஷ்பு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது, "ரஜினி சாரின் ஆத­ரவை நான் கேட்­க­வேண்­டிய அவ­சி­யமே இல்லை, அவ­ரது ஆத­ரவு என்­றென் றும் எப்­போ­தும் எனக்­குத்­தான்," என்று கூறி­யுள்­ளார்.

அண்­மை­யில் தனது அர­சி­யல் ஆட்­டத்­துக்கு எல்­லாம் ஒரு பெரிய முற்­றுப்­புள்ளி வைத்­து­விட்ட நடி­கர் ரஜி­னி­காந்த், அதன்­பி­றகு இது­வரை யாருக்­கும் தனது ஆத­ரவை தெரி விக்­கா­மல் அமை­தி ­காத்து வரு­கி­றார்.

இருப்­பி­னும் தேர்­தல் நாளுக்கு இரு தினங்­க­ளுக்கு முன்பு அவர் தனது ரசி­கர்­க­ளி­டம் குறிப்­பிட்ட கட்­சிக்கு ஆத­ரவு அளிக்­கும்­படி வேண்­டு­கோள் விடுப்­பார் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், குஷ்பு தனது வேட்­பு­ம­னு­வில் தான் எட்­டாம் வகுப்பு வரை மட்­டுமே படித்­துள்ள தாகக் குறிப்­பிட்­டுள்­ளார். அத்து டன், தமி­ழ­கம் முழு­வ­தும் நான்கு குற்ற வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தா­க­வும் தெரி­வித்­துள்­ளார்.

அத்­து­டன், தனது அசை­யும் அசையா சொத்து விவ­ரங்­க­ளை­யும் அவர் வெளி­யிட்­டுள்­ளார்.

அதில், குஷ்­பு­வின் பெய­ரில் மொத்­தம் ரூ.22.55 கோடி சொத்து களும் அவ­ரது கண­வர் சுந்­தர் சி பெய­ரில் மொத்­தம் 18.41 கோடி ரூபாய் சொத்­து­களும் உள்­ள­தா­க­வும் தனது பெய­ரில் ரூ.3.45 கோடி கடன் உள்­ள­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.