மம்தா: வாக்குகளை வாங்க பாஜக தலைவர்கள் பண மூட்டைகளுடன் வந்துள்ளனர்் மோடி: மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு வரும்

மம்தா: வாக்குகளை வாங்க பாஜக தலைவர்கள் பண மூட்டைகளுடன் வந்துள்ளனர்் மோடி: மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு வரும்

2 mins read
33ba5e81-ae45-4f90-86fb-53e1c99c5ecd
-

கோல்­கத்தா: மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் பதி­வா­கும் வாக்­கு­கள் அனைத்­தும் மே 2ஆம் தேதி எண்­ணப்­பட்ட பின்­னர் அம்­மாநி­லத்­தில் மம்தா பானர்­ஜி­யின் ஆட்­டம் முடி­வுக்கு வரும் என பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

தேர்­த­லுக்­குப் பிறகு மேற்கு வங்க மாநி­லத்­தின் வளர்ச்சி ஆரம்­ப­மா­கும் என்­றும் நேற்று முன்­தி­னம் புரு­லி­யா­வில் நடை­பெற்ற பிர­சாரக் கூட்­டத்­தில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

மேற்கு வங்­கத்­தில் மாவோயிஸ்டு வன்மு­றைக்கு முதல்­வர் மம்தா தலை­மை­யி­லான மாநில அரசு ஆத­ரவு அளிப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், மாவோ­யிஸ்டுக­ளின் புதிய இனம் ஒன்றை திரி­ணா­முல் காங்­கி­ரஸ் உரு­வாக்கி உள்­ள­தாக விமர்­சித்­தார். மாவோ­யிஸ்டுகள் அர­சுப் பணத்தைக் கொள்­ளை­யடிப்­ப­தா­க­வும் அது ஏழை­க­ளின் பணம் என்­றும் குற்­றம்­சாட்­டிய அவர், கொரோனா பொது­மு­டக்க காலத்­தில் கூட திரி­ணா­முல் காங்­கி­ரஸ் அரசு ஊழ­லில் திளைத்­ததா­கக் குறிப்­பிட்­டார்.

மேற்கு வங்­கத்­தில் குற்­றங்­கள், குற்­ற­வா­ளி­க­ளின் எண்­ணிக்கை பெரு­கி­யுள்­ள­தா­கக் கவலை தெரி­வித்த பிர­த­மர் மோடி, குற்­ற­வா­ளி­கள் யாரும் சிறை­யில் அடைக்­கப்­ப­ட­வில்லை என்­றார். மேலும் மாஃபியாக்­களும் ஊடு­ரு­வல்­காரர்­களும் அங்கு சுதந்­தி­ர­மா­கச் செயல்­ப­டு­வ­தா­கச் சாடிய அவர், அனை­வ­ரும் கூட்­டணி அமைத்து ஊழல் செய்­கி­றார்­கள் என்று சாடினார்்.

"என்­னைப் பொருத்­த­வரை மம்தா எனக்கு மக­ளைப் போன்­ற­வர். இந்­தி­யா­வில் உள்ள கோடிக்­கணக்­கான மகள்­களில் அவ­ரும் ஒரு­வர். அத­னால்­தான் மம்­தா­வுக்­கு காலில் ஏற்­பட்­டுள்ள காயத்தை நினைத்து வருத்­தப்­படு­கி­றேன். அவ­ரின் காயம் விரை­வா­கக் குண­ம­டைய இறை­வ­னி­டம் பிரார்த்­திக்­கி­றேன்," என்­றார் பிர­த­மர் மோடி.

மத்­திய அர­சின் திட்­டங்­கள் பல­வற்றை திரி­ணா­முல் காங்­கி­ரஸ் அரசு மேற்கு வங்­கத்­தில் இன்­னும் செயல்­ப­டுத்­த­வில்லை என்று சுட்­டிக்­காட்­டிய பிர­த­மர் மோடி, திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்சி தலித்­து­கள், பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள், ஆதி­வா­சி­களை ஒரு­போ­தும் தனது சொந்­த­மா­கக் கரு­தி­ய­தில்லை என்­றார்.

இதற்­கி­டையே, மேற்கு வங்க வாக்­கா­ளர்­க­ளைக் கவர்ந்­தி­ழுப்­ப­தற்­கா­க­வும் வாக்­கு­களை அள்­ளு­வ­தற்­கா­க­வும் பாஜக தலை­வர்­கள் பண மூட்­டை­க­ளு­டன் விமா­னங்­களில் வந்­தி­றங்­கு­வ­தாக முதல்­வர் மம்தா பானர்ஜி சாடி­யுள்­ளார்.

மனி­தர்­க­ளின் துன்­ப­மான கால­கட்­டத்­தில் பாஜ­க­வி­னர் காணா­மல் போய் விடு­வ­தாக அவர் பிர­சா­ரக் கூட்­டத்­தில் குறிப்­பிட்­டார்.

"பாஜக கல­க­வா­தி­க­ளின் கட்சி. நாங்­கள் கல­கத்­தை­யும் ரத்­தம் சிந்­து­வ­தை­யும் விரும்­பு­வ­தில்லை. பழி­வாங்­கும் அர­சி­யல் மேற்கு வங்க மாநி­லத்­துக்­குள் நுழை­வதை விரும்­ப­வில்லை," என்­றார் மம்தா.

மம்தா என் மகளைப் போன்றவர். தேர்தலுக்குப் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் தொடங்கப்படும்.



பிரதமர் நரேந்திர மோடி