முந்நூறு கிலோ ஹெராயின் பறிமுதல்

முந்நூறு கிலோ ஹெராயின் பறிமுதல்

1 mins read

புது­டெல்லி: முந்­நூறு கிலோ 'ஹெரா­யின்' போதைப் பொரு­ளைக் கடத்­திச் செல்ல முற்­பட்ட மூன்று பட­கு­களை இந்­திய கட­லோ­ரக் காவல்­படை பறி­மு­தல் செய்­துள்­ளது.

லட்­சத்­தீ­வுக்கு அருகே சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கட­லோ­ரக் காவல்­ படை­யி­னரின் கண்­ணில் படா­மல் அப்­ப­ட­கு­கள் அர­பிக் கட­லில் இந்­திய எல்­லையை கடந்து செல்ல முயன்­றன.

நேற்று முன்­தி­னம் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் இந்­திய கட­லோ­ரக் காவல்­ப­டை­யி­னர் அந்த மூன்று பட­கு­க­ளை­யும் சுற்றி வளைத்­த­னர். அவர்­க­ளுக்கு உதவ ஹெலி­காப்­ட­ரும் வர­வ­ழைக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து வீரர்­கள் அப்­ப­ட­கு­க­ளைச் சோத­னை­யிட்­ட­போது 300 கிலோ ஹெரா­யின், 5 ஏகே ரக துப்­பாக்­கி­கள், ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட தோட்­டாக்­கள் உள்­ளிட்­டவை சிக்­கின.

இத­னால் கடும் அதிர்ச்சி அடைந்த கடற்­படை அதி­கா­ரி­கள் மூன்று பட­கு­க­ளை­யும் பறி­மு­தல் செய்து, அதில் இருந்­த­வர்­க­ளி­டம் தீவிர விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

படகுகளில் இருந்து கைப்­பற்­றப்­பட்ட போதைப் பொருள் எந்த நாட்­டுக்கு கடத்­திச் செல்­லப்­பட இருந்­தது என்­பது குறித்து இது­வரை அதிகாரபூர்வ தக­வல் ஏதும் இல்லை.