வட்டாரப் பாதுகாப்பு குறித்து இந்திய, அமெரிக்க தற்காப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

வட்டாரப் பாதுகாப்பு குறித்து இந்திய, அமெரிக்க தற்காப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

1 mins read
ef54d6f1-8f69-4015-a10e-f04a0745a7ac
இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வருகை மேற்கொண்டு புதுடெல்லிக்கு வந்த அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்ட்டினுக்கு இந்தியாவின் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பளித்தார். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வின் தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் அமெ­ரிக்­கா­வின் தற்­காப்பு அமைச்­சர் லாய்ட் ஆஸ்ட்­டினை நேற்று சந்­தித்­துப் பேசி­னார். அந்­தச் சந்­திப்­பில் இரு தரப்பு உற­வு­களை மேம்­ப­டுத்­து­வது குறித்து இரு தலை­வர்­களும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர். இந்­திய - பசி­பிக் வட்­டா­ரத்­தில் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை மேலும் விரி­வாக்­கு­வது உள்­ளிட்­டவை அந்­தப் பேச்­சு­வார்த்­தை­யில் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. உயிர்க்­கொல்­லித் தொற்று உலகை அச்­சு­றுத்தி வரும் இந்த நெருக்­கடி காலத்­தி­லும் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் லாய்ட் ஆஸ்­டின் இந்­தி­யா­வுக்கு வருகை மேற்­கொண்­டது இரு நாடு­க­ளுக்­கும் இடையே உள்ள நட்­பின் கடப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைச்­சர் ராஜ்­நாத் சிங் கூறி­னார்.

இந்தோ - பசி­பிக் வட்­டா­ரத்­தில் எண்­ணெய்க் கசி­வு­கள், பேர­ழிவு மேலாண்மை, பயங்­க­ர­வா­தம் உள்­ளிட்ட பிரச்­சி­னை­களில் ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டு­வது குறித்து இருநாட்­டுத் ­த­லை­வர்­களும் பேசி­னர்.