தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

2 mins read
18095aac-f0d5-4e9a-af02-a736110c0860
-

புது­டெல்லி: ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­ப் பேரவையில் இலங்­கை­யில் நடந்த போர்க்­குற்­றங்­க­ளுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள தீர்­மா­னத்­தின் மீதான வாக்­கெ­டுப்பு ஒத்திவைக்­கப்­பட்­டது.

நேற்று நடை­பெ­று­வ­தாக இருந்த வாக்­கெ­டுப்பு நிகழ்ச்சி நிர­லில் ஏற்­பட்ட குழப்­பங்­கள் கார­ண­மாக ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஜெனி­வா­வில் ஐநா மனித உரிமைப் பேர­வை­யின் கூட்­டம் நடை­பெற்று வரு­கிறது. இம்­முறை இலங்­கை­யில் நிகழ்ந்த போர்க்­குற்­றங்­கள் தொடர்­பாக தீர்­மா­னம் ஒன்று தாக்­கல் செய்­யப்­ப­டு­கிறது. இந்த குற்­றச்­செ­யல்­க­ளுக்கு இலங்கை அரசு பொறுப்­பேற்க வேண்­டும் என்­றும் அங்கு மனித உரி­மை­கள் மீறப்­படு­கின்­ற­னவா என கண்­கா­ணிக்­க வேண்­டும் என்­றும் அத்­தீர்­மா­னத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இலங்கை அர­சுக்கு எதி­ராக இந்­தியா, ஐநா பேர­வை­யில் வாக்­க­ளிக்க வேண்­டும் என தமி­ழக அர­சி­யல் கட்­சி­கள் வலி­யு­றுத்தி உள்­ளன. இந்­நி­லை­யில் மனித உரி­மைப் பேர­வை­யில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்­தின் மீது நேற்று வாக்­கெ­டுப்பு நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இலங்­கைக்கு எதி­ராக பல நாடு­கள் வாக்­க­ளிக்க வாய்ப்­புள்­ள­தாக கரு­தப்­பட்ட நிலை­யில், நேற்று கடைசி நேரத்­தில் வாக்­கெ­டுப்பு ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­தாக அறி­விப்பு வெளி­யா­னது. மனித உரி­மைப் பேர­வை­யின் நிகழ்ச்சி நிர­லில் ஏற்­பட்ட குழப்­பங்­களே இதற்­குக் கார­ணம் எனக் கூறப்­ப­டு­கிறது.

இலங்கை ராணு­வத்­துக்­கும் விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­துக்­கும் இடையே நடந்த இறு­திக்­கட்ட போரின்­போது ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் ஏரா­ள­மா­னோர் போர்க்­கா­லத்­தின்­போது காணா­மல் போன­தா­க­வும் தொண்­டூ­ழிய அமைப்­பு­கள் தெரி­விக்­கின்­றன.

காணா­மல் போன­வர்­க­ளின் நிலை குறித்து தெரி­ய­வில்லை. அவர்­க­ளின் குடும்­பத்­தார் நீதி கேட்டுப் போராடி வரு­கி­றார்­கள். இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என­வும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

ஆனால் இந்த குற்­றச்­சாட்­டு­களை இலங்கை அரசு மறுத்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பில் இலங்கை அர­சுக்கு எதி­ராக ஐநா மனித உரி­மைப் பேர­வை­யில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள தீர்­மா­னம் அதற்கு கடும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி உள்­ள­து.