கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த பட்டி மட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்மிஜா கே மோகன், 37, (படம்) என்பவர் லாட்டரிச் சீட்டு வியாபாரம் செய்து வருகிறார். கோடை பம்பர் பரிசுக்காக வாங்கி வைத்த லாட்டரிச் சீட்டுகளில் 12 மட்டும் தங்கிவிட்டது. வாட்ஸ்அப் குரூப்பில் தெரிவித்த பின்னரும் யாரும் வாங்க முன்வராததால் தம்மிடம் வழக்கமாக லாட்டரிச் சீட்டு வாங்கும் சந்திரன் என்பவரை கைபேசியில் அழைத்துள்ளார். 12 சீட்டுகளின் எண்களையும் அனுப்பச் சொல்லி அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்த சந்திரன், அதற்கான பணத்தை நேரில் சந்திக்கும்போது தருவதாகக் கூறிவிட்டார். அவர் தேர்ந்தெடுத்த 316142 என்ற எண்ணுக்கு கடந்த ஞாயிறன்று முதல் பரிசு ரூ.6 கோடி விழுந்தது. ஆனால் அந்தச் சீட்டு ஸ்மிஜாவிடம் இருந்தது. உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு சந்திரனைச் சந்தித்துக் கொடுத்துவிட்டார். சந்திரன் உற்சாத்தில் மிதந்தார். சீட்டு விலை 200 ரூபாயை மட்டும் அவரிடம் இருந்து ஸ்மிஜா பெற்றுக்கொண்டார். ரூ.6 கோடி பரிசு விழுந்த சீட்டு தம்மிடம் இருந்தும் அதன் மீது எவ்வித சபலமும் கொள்ளாமல் உரியவரிடம் சீட்டை ஒப்படைத்த ஸ்மிஜாவின் நேர்மையை சமூக ஊடக உலகம் பாராட்டி வருகிறது. இத்தனைக்கும் உடல் நலமில்லாத இரு குழந்தைகளுடன் வாழ்க்கைப் போராட்டம் நடத்தி வரும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்மிஜா.
ஏழ்மையிலும் நேர்மை: ரூ.6 கோடிக்கு ஆசைப்படாத பெண்
1 mins read
-