5 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் 50,000 பேர் பாதிப்பு

5 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் 50,000 பேர் பாதிப்பு

2 mins read
362d1aaa-759c-499f-b86a-39652d690648
-

இந்தியாவில் இருமுறை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றின் இரண்­டா­வது அலை இந்­தி­யா­வில் துவங்­கி­விட்­ட­தாகக் கூறப்­படும் நிலை­யில் நேற்று முன்­தி­னம் மேலும் புதி­தாக 53,476 பேருக்குத் தொற்றுப் பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

சுமார் ஐந்து மாதங்­க­ளுக்­குப் பிறகு அன்­றா­டம் பதி­வா­கும் புதிய பாதிப்­பு­க­ளின் எண்­ணிக்கை 50 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது.

மேலும் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 251 பேர் கிரு­மித்­தொற்றுக்குப் பலி­யாகி உள்­ள­னர்.

நாடு முழு­வ­தும் ஐம்­பது மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்ள மத்­திய சுகா­தார அமைச்சு, நேற்று முன்­தி­னம் 26,490 பேர் கொவிட்-19 நோயில் இருந்து குணமடைந்ததாகத் தெரிவித்துள்ளது.

மத்­திய, மாநில அர­சு­கள் மேற்­கொண்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளின் பல­னாக நாடு முழு­வ­தும் கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு வெகு­வாக கட்­டுக்­குள் வந்­தது.

தின­மும் ஒரு லட்­சம் பேர் புதி­தாக பாதிக்­கப்­பட்டு வந்த நிலை­யில், அண்­மைய சில மாதங்­க­ளாக அந்த எண்­ணிக்கை பத்­தா­யி­ரத்­துக்­கும் குறை­வாக இருந்­தது.

இந்­நி­லை­யில் மகா­ராஷ்­டிரா, கேரளா உள்­ளிட்ட மாநி­லங்­களில் தொற்­றுப்­ப­ர­வல் திடீ­ரென அதி­க­ரித்­துள்­ளது. இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றின் இரண்­டா­வது அலை தொடங்கி உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே இந்­தி­யா­வில் 'இரு­முறை உரு­மா­றிய கொரோனா' வகை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

நாடு முழு­வ­தி­லும் இருந்து சேக­ரிக்­கப்­பட்ட சுமார் பத்­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மாதி­ரி­களை ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தில் 771 மாதி­ரி­களில் உரு­மா­றிய கொரோனா பாதிப்பு இருப்­பது தெரியவந்­துள்­ளது.

இந்­தி­யா­வில் காணப்­படும் கொரோனா கிருமி வகை­களை மர­பணு வரி­சைப்­ப­டுத்தி ஆய்வு செய்­வ­தற்­காக பத்து தேசிய ஆய்­வுக்­கூ­டங்­களை உள்­ள­டக்­கிய குழு ஒன்றை மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்சு அமைத்­துள்­ளது.

மகா­ராஷ்­டிரா, கேரளா, ஆந்­திரா, தெலுங்­கானா ஆகிய மாநி­லங்­க­ளில்­தான் உரு­மா­றிய கொரோனா கிரு­மித்­தொற்­றால் அதி­கம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

எனி­னும் சில மாநி­லங்­களில் கொரோனா பாதிப்பு அதி­க­ரித்­த­தற்கு இந்த உரு­மா­றிய கொரோனா கிரு­மித்­தொற்­று­தான் கார­ணம் என்று ஆய்வு செய்யாமல் கூற இய­லாது என்­கி­றார்­கள் மருத்­துவ நிபு­ணர்­கள்.