மம்தா: பிரதமர் மோடி பொய் பேசுகிறார்

மம்தா: பிரதமர் மோடி பொய் பேசுகிறார்

1 mins read
f4c43319-ad15-40ac-87c6-1ff4252e912b
விஷ்ணுபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தாவைக் கண்டதும் அவரது கட்சி பெண் நிர்வாகி ஒருவர் தரையில் விழுந்து வணங்கி வரவேற்றார். படம்: ஊடகம் -

கோல்­கத்தா: பிர­த­மர் நரேந்­திர மோடி போன்று பொய் பேசும் பிர­த­மரை தாம் இது­வரை பார்த்­தது இல்லை என மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி கூறி­யுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் விஷ்­ணு­பூ­ரில் தேர்­தல் பிர­சா­ரம் மேற்­கொண்ட அவர், பாஜ­க­வி­னர் மேற்கு வங்க மாநி­லத்­துக்­குள் சமூக விரோ­தி­களை அழைத்து வந்­தி­ருப்­ப­தாக குற்­றம்­சாட்­டி­னார்.

மேற்கு வங்­கத்­தின் கலாசாரத்தை அழிக்க பாஜக முயற்சி செய்­வ­தாக குறிப்­பிட்ட அவர், மத்­திய அரசு விவ­சா­யி­களை அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தா­கச் சாடி­னார்.

"பிர­த­மர் மோடி பொய்­களை மட்­டுமே கூறு­கி­றார். டெல்­லி­யில் கடந்த நான்கு மாதங்­க­ளாக விவ­சா­யி­கள் சாலை­யில் அமர்ந்து போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். ஆனால் மத்­திய அரசு கண்­டு­கொள்­ள­வில்லை.

"நாட்­டின் அனைத்து வளத்­தை­யும் பணத்­தை­யும் தொழி­ல­தி­பர் அதானி கொள்­ளை­ய­டித்து வரு­கி­றார். இனி­மேல் மோடி, அமித் ஷா, அதானி ஆகி­யோர் மட்­டுமே செழித்து வாழ்­வார்­கள். மக்­க­ளுக்கு கண்­ணீர் மட்­டுமே மிஞ்­சும்," என்­றார் மம்தா.

இந்­நி­லை­யில் தேர்­தல் நெருங்­கு­வ­தால் முதல்­வர் மம்­தா­வுக்குத் தோல்வி பயம் அதி­க­ரித்­து­விட்­ட­தாக பிர­த­மர் மோடி கூறி­யுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் மேற்கு வங்­கத்­தில் பிர­சா­ரம் மேற்­கொண்ட அவர், விரை­வில் நடை­பெ­ற­வுள்ள தேர்­த­லில் பாஜக வெற்றி பெற்­றால் மண்­ணின் மைந்­தரே முதல்­வ­ராக அறி­விக்­கப்­ப­டு­வார் என உறுதி அளித்­தார். மேற்கு வங்­கத்­தில் ஆட்சி மாற்­றம் வரு­வ­தற்­கான காலம் கனிந்­து­விட்­டது என்­றும் பிர­த­மர் மோடி மேலும் கூறி­னார்.