விவசாயிகள் முடிவு: மீண்டும் டெல்லியில் போராட்டம்

விவசாயிகள் முடிவு: மீண்டும் டெல்லியில் போராட்டம்

1 mins read
07055b7a-8e92-4bc0-83bc-b41e5fd555d0
-

புது­டெல்லி: மிக விரை­வில் டெல்லி நக­ருக்­குள் நுழைந்து போராட்­டத்­தில் ஈடு­பட விவ­சாய குழுக்­கள் முடிவு செய்­தி­ருப்­ப­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

புதிய வேளாண் சட்­டங்­க­ளைத் திரும்­பப்­பெற வலி­யு­றுத்தி கடந்த நான்கு மாதங்­க­ளாக விவ­சா­யி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் டெல்­லி­யின் எல்­லை­யி­லும் புற­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் கூடா­ரங்­கள் அமைத்து தங்­கி­யுள்­ள­னர். நெடுஞ்­சாலை ஓரங்­களில் தங்கி, அங்­கேயே உண்டு உறங்கி வரும் விவ­சா­யி­க­ளின் இந்­தப் போராட்­ட­மா­னது நேற்­று­டன் 120 நாளை எட்­டி­யது.

இந்­நி­லை­யில் மீண்­டும் டெல்லி நக­ருக்­குள் நுழைந்து போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வது என விவ­சா­யக் குழுக்­கள் முடிவு செய்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அடுத்த சில தினங்­க­ளுக்­குள் பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் டெல்­லிக்­குள் நடத்­தப்­படும் போராட்­டத்­துக்­காக அங்கு குவியத் தொடங்­கு­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.