மும்பை மருத்துவமனையில் தீ விபத்து; 10 பேர் பலி

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து; 10 பேர் பலி

1 mins read
3d25b7fb-582c-4d8d-971e-c7be27f7a437
மும்­பை­யின் பந்­தூப் பகு­தி­யில் உள்ள 'சன்ரைஸ்' மருத்துவமனையில் கொழுந்துவிட்டு எரியும் தீயை, பாதுகாப்பாக தள்ளி நின்று படம்பிடிக்கிறார் ஒரு போலிஸ்காரர். படம்: இபிஏ -

மும்பை: மும்­பை­யின் பந்­தூப் பகு­தி­யில் கொரோனா நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளித்து வரும் சன்­ரைஸ் மருத்­து­வ­ம­னை­யின் கீழ்த்­த­ளத்­தில் உள்ள 'டிரீம்ஸ் மால்' என்­னும் கடைத்­தொ­கு­தி­யில் நேற்று நள்­ளி­ரவு 12.30 மணிக்­குப் பற்­றிய தீ, மருத்­து­வ­ம­னைக்­கும் பர­வி­யது.

இந்த தீ விபத்­தில் 10 கொவிட்-19 நோயா­ளி­கள் பலி­யாகி விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. முன்­ன­தாக இரண்டு கொரோனா நோயா­ளி­கள் மட்­டும் இறந்­து­விட்­ட­தா­க­வும் மற்­ற­வர்­கள் தீக்­கா­யங்­க­ளுக்­காக வேறு ஒரு மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

சில மணி நேரங்­களில் தீய­ணைப்­புப் படை­யின் தலைமை அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், பலி எண்­ணிக்கை பத்­தாக அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

இந்­நி­லை­யில் இறந்­த­வர்­கள் யாரும் தீயில் கருகி இறக்­க­வில்லை என்­றும் அவர்­கள் கொவிட்-19 தொற்­றுப் பாதிப்­பால்­தான் மாண்­ட­னர் என்றும் மருத்­து­வ­மனை அறிக்கை ஒன்­று தெரி­வித்­தது.

சம்­ப­வ இடத்தை ஆய்­வு­செய்த மும்பை காவல்­துறை ஆணை­யா­ளர் கூறு­கை­யில், "இது ஒரு மோச­மான தீ விபத்து.

"மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­தினரின் மெத்­த­னப் போக்கே இதற்­குக் கார­ணம் என்பது தெரி­ய­வந்­துள்­ளது. அவர்­கள் மீது வழக்­குப் பதிவு செய்து விசா­ரிக்­கப்­படும்," என்று கூறி­யுள்­ளார்.