மம்தா: சிறுபான்மையினர் வாக்குகளை அபகரிக்க பாஜக ஆதரவில் புதிய கட்சி

மம்தா: சிறுபான்மையினர் வாக்குகளை அபகரிக்க பாஜக ஆதரவில் புதிய கட்சி

1 mins read
84a62a81-5b99-435c-994d-09c22ee73796
-

கோல்­கத்தா: மாநி­லத்­தில் சிறு­பான்­மை­யி­ன­ரின் வாக்­கு­களை அப­க­ரிக்க பாஜக ஆத­ர­வு­டன் புதிய கட்சி இந்­தத் தேர்­த­லில் முளைத்­துள்­ளது என்று திரி­ணாமுல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் மம்தா பானர்ஜி சாடி­னார். அவர் பெயர் குறிப்­பி­டா­மல் கூறிய அந்­தக் கட்சி முஸ்­லிம் மத­குரு அப்­பாஸ் சித்­திக்­கின் இந்­திய மதச்­சார்­பற்ற முன்­னணிக் கட்சி என்று கூறப்­ப­டு­கிறது.

மேற்கு வங்­கம், அசா­மில் முதல் கட்ட தேர்­த­லுக்­கான பரப்­புரை நேற்று மாலை 5 மணி­யு­டன் ஓய்ந்­துள்­ளது. நாளை முதல்­கட்ட வாக்­குப் பதிவு நடை­பெற உள்­ளது. மேற்கு வங்­கா­ளத்­தில் 30 தொகு­தி­க­ளுக்­கும், அஸ்­ஸா­மில் 47 தொகு­தி­க­ளுக்­கும் வரும் சனிக்­கி­ழமை தேர்­தல் நடை­பெற உள்­ளது. மேற்கு வங்­கத்­தில் உள்ள 294 தொகு­தி­க­ளுக்­கும் 8 கட்­டங்­க­ளாக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இந்­நி­லை­யில் மேற்கு வங்க முதல்­வர் மம்தா, திரி­ணா­முல் காங்­கி­ர­சின் வாக்­கு­க­ளைப் பிரிக்­கும் வேளை­யில் பாஜக ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.