வங்காள தே‌சத்தில் பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு

வங்காள தே‌சத்தில் பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு

1 mins read
1a0fccc5-9fd3-4330-925d-03cd5867a63e
-

டாக்கா: கொவிட்-19 தொற்­று பர­வத்­தொ­டங்­கிய பின் 15 மாதங்கள் கழித்து பிர­த­மர் நரேந்­திர மோடி முதன்­மு­த­லாக வெளி­நாடு சென்­றுள்­ளார்.

வங்காள தேசத்தின் 50வது சுதந்­திர நாள் மற்­றும் அந்­நாட்­டின் தேசத்­தந்தை ‌ஷேக் முஜி­பூர் ரகு­மா­னின் நூற்­றாண்டு விழா­வில் பங்­கேற்­கு­மாறு அந்­நாட்­டுப் பிர­த­மர் ‌ஷேக் ஹசீனா விடுத்த அழைப்­பின்­பே­ரில் அங்கு சென்­றுள்­ளார். சிறப்பு விமா­னம் மூலம் டாக்கா சென்ற பிர­த­மர் மோடியை வங்காள தேசப் பிர­த­மர் ஷேக் ஹசீனா விமான நிலை­யத்­திற்கே சென்று பூங்­கொத்­துக் கொடுத்து வர­வேற்­றார். இந்த பய­ணத்­தின்­போது வங்­கா­ள­தேச பிர­த­மர் ஷேக் ஹசீ­னா­வு­டன் பிர­த­மர் மோடி பல்­வேறு விவ­கா­ரங்­கள் குறித்து ஆலோ­சனை நடத்­து­கி­றார். இதில், ரோகிங்­யா அக­தி­கள் விவ­கா­ரம், பொருளியல், பாது­காப்பு உள்­ளிட்டவை பேசப்படும். அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்கலா கூறியுள்ளார். அங்குள்ள பிரசித்தி பெற்ற ஜ‌‌ஷோரி‌ஷ்வரி காளி கோயிலுக்குச் சென்று வழிபடவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.