குஜராத் கல்லூரிகளில் கிருமி பரவல்: 65 பேர் பாதிப்பு

2 mins read
c8b486b6-09b6-4022-bf5e-10a9c30bbc6e
அகமதாபாத் நகரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமானோர் திரண்டு சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

அகமதாபாத் மாணவர் விடுதி மூடப்பட்டது; இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது

அக­ம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லம் அக­ம­தா­பாத்­தில் உள்ள இந்­திய மேலாண்மை நிறு­வ­ன­மான ஐஐ­எம்­மில் பயி­லும் மாண­வர்­கள், பேரா­சி­ரி­யர்­கள் உள்­ளிட்ட 40 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இங்கு பயி­லும் ஒரு சில மாண­வர்­க­ளுக்கு காய்ச்­சல் இருந்­த­தை­அடுத்து அவர்­க­ளுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது. அப்­போது விடு­தி­யில் தங்­கி­யி­ருந்த ஒரு மாண­வ­ருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது தெரிய வந்­தது.

இதை­ய­டுத்து அவ­ரு­டன் தங்­கி ­இ­ருந்த மாண­வர்­க­ளுக்­கும் சோதனை செய்­யப்­பட்­டது. அவர்­க­ளுக்­குப் பாடம் நடத்­திய போரா­சி­யர்­க­ளுக்­கும் பரி­சோ­தனை நடந்­தது. மொத்­த­மாக 40 பேருக்கு கிரு­மிப் பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. இத­னைத் தொடர்ந்து அவர்­கள் அனை­வ­ரும் தனி­மைப்

­ப­டுத்­தப்­பட்­ட­னர். விடு­தி­யும் மூடப்­பட்­டது.

அது­போ­லவே காந்­தி­ந­க­ரில் உள்ள ஐஐடி நிறு­வ­னத்­தில் பயி­லும் 25 மாண­வர்­கள், பேரா­சி­யர்­க­ளுக்­கும் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவர்­களும் தனி­மைப்­

ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். தொற்று ஏற்­பட்­டுள்ள பெரும்­பா­லான மாண­வர்­க­ளுக்குப் பெரிய அள­வில் பாதிப்பு இல்லை என்­ப­தால் அவர்­க­ளுக்கு சிகிச்சை தேவைப்­ப­ட­வில்லை.

அனை­வ­ரும் தனி­யாக தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். விரை­வில் தேர்­வு­கள் தொடங்­க­வுள்ள நிலை­யில் கிரு­மித்­தொற்று உள்ள மாண­வர்­கள் தனி­யாக அமர வைக்­கப்­பட்டு தேர்வு நடத்­தப்­படும் எனத் தெரி­கிறது.

ஐஐ­எம் அதி­காரி ஒரு­வர், "பலர் அறி­கு­றி­யற்­ற­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். மேலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் விரை­வாக மீண்டு வரு­கிறார்­ கள்.

"கடந்த ஆண்­டி­லி­ருந்து இணை­யம் மூல­மா­கவே வகுப்­பு­கள் நடை­பெற்று வரு­கின்­றன. வளா­கத்­தில் நுழை­வ­தும் வெளி­யே­று­வ­தும் தடை­செய்­யப்­பட்­டுள்­ளது," என்று தெரி­வித்­தார்.

குஜ­ராத் மாநி­லத்­தில் கடந்த சில தினங்­க­ளாக கிருமி பாதிப்பு அதி­க­ரித்­துள்­ளது. குறிப்­பாக, அக­ம­தா­பாத் நக­ரில் தொற்று வேக­மா­கப் பர­வு­வ­தால் ஏரா­ள­மா­னோர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

அத­னைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யில் அக­ம­தா­பாத் மாந­க­ராட்சி தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளது. அதன்­படி, அக­ம­தா­பாத்­தில் மக்­கள் அதி­கம் கூடும் இடங்­க­ளான விலங்­கி­யல் பூங்கா, பொழு­து­போக்கு பூங்­காக்­கள், நீர்­நிலை சுற்­றுலா தலங்­கள் ஆகி­யவை மூடப்­பட்­டுள்­ளன.

அதே­போல இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊர­டங்கு அமல்படுத்­தப்­பட்­டுள்­ளது.