புதுடெல்லி: முதல் கட்டமாக அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் சனிக்
கிழமை தேர்தல் நடந்தது. முதல் கட்டத்தில் ஏறக்குறைய 79% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா (படம்) நேற்று தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக நடந்த 30 தொகுதிகளுக்கான தேர்தலில் 26 இடங்களை வெல்வோம். அசாமில் 47 தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றுவோம். தேர்தல் களத்திலிருந்து எங்கள் கட்சியினர் மூலம் கிடைத்த தகவலின் அடிப்
படையில் இதைத் தெரிவிக்கிறேன்.
"இரு மாநிலங்களிலும் அமைதியாகவும் அதிகமான விழுக்காட்டிலும் வாக்குப்பதிவு நடந்தது சாதகமான விஷயம். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
"எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் தேர்தலை நடத்திக் கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
"மேற்கு வங்கத்திலும் அசாம் மாநிலத்திலும் பாஜக மிகப்பெரிய வெற்றிபெறும் என்று நம்புகிறேன். மேற்கு வங்கத்தில் 200 இடங்களையும் அசாம் மாநிலத்தில் கடந்த முறையை விடச் சிறப்பான இடங்களையும் பெற்று ஆட்சி அமைப்போம்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதி மக்கள் மாற்றத்துக்காகவும் மாநிலத்தின் எதிர்காலத்துக்காகவும் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்," என்று அமித் ஷா தெரிவித்தார்.

