மீரட்: உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பூல்பாக் பகுதியில் பழமையான கட்டடம் ஒன்றில் மருந்து கிடங்கு உள்ளது. ஓம் பிரகாஷ் சர்மா என்பவருக்குச் சொந்தமான இந்தக் கட்டடத்தில் ஏராளமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. சனிக்
கிழமை அதிகாலை இங்கு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் கட்டடத்திற்குள் இருந்து ராஜீவ் குமார் சர்மா என்பவர் வெடிவிபத்தில் சிக்கி
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணை நடக்கிறது.

