தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூட்டணிக் கட்சிகள் மோதல்: உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி

2 mins read
f57ffedc-eced-4ab0-adfd-7d6b411cca14
உத்தவ் தாக்கரே. படம்: ஊடகம் -

மகாராஷ்டிராவில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க திட்டம் எனத் தகவல்

மும்பை: கூட்­ட­ணிக் கட்­சி­க­ளைச் சேர்ந்த தலை­வர்­கள் இடையே நடை­பெ­றும் வார்த்­தைப் போர் கார­ண­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் சிவசேனா தலை­மை­யி­லான கூட்­டணி அரசுக்கு கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் கூட்­டணி அர­சில் பங்­கேற்­றுள்ள தேசி­ய­வாத காங்­கிரஸ், அதி­லி­ருந்து விலகி பாஜ­க­வுடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்­கப் போவ­தாக வெளி­யான தக­வல் மகா­ராஷ்­டிரா அர­சி­யல் களத்­தில் பர­ப­ரப்­பை­யும் புது விவா­தங்­க­ளை­யும் எழுப்­பி­யுள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் மீண்­டும் அதி­கரித்­துள்ள நிலை­யில், அம்­மா­நில அரசு சுகா­தார நெருக்­க­டி­யு­டன் அர­சி­யல் கள நெருக்­க­டி­யை­யும் எதிர்­கொண்­டுள்­ளது.

மகாராஷ்டிராவில் தற்போது முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

மும்பை மாநகர காவல்துறை ஆணையரான பரம்வீர் சிங் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்தே ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­வுக்கு பரம்­வீர் சிங் எழு­திய கடி­தம் ஒன்­றில், காவல்­துறை விவ­கா­ரங்­களில் மாநில உள்­துறை அமைச்­ச­ரும் தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சியை சேர்ந்­த­வ­ரு­மான அனில் தேஷ்­முக்­கின் தலை­யீடு அதி­கம் இருப்­ப­தா­க­வும் மும்­பை­யில் உள்ள மது­பான விடு­தி­கள், கேளிக்கை மையங்களில் இருந்து மாதந்­தோறும் நூறு கோடி ரூபாய் லஞ்­சம் வசூ­லித்­துத் தரு­மாறு அவர் நிர்­பந்­தம் செய்­தார் என்­றும் பரம்­வீர் சிங் குறிப்­பிட்­டுள்­ளார்.

இத­னால் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே கடும் அதி­ருப்­தி­யில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில், உள்­துறை அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்க மூத்த தலை­வர்­கள் சிலர் மறுத்­த­தன் கார­ண­மா­கவே வேறு வழி­யின்றி அனில் தேஷ்­முக் அப்­ப­த­வி­யில் அமர்த்­தப்­பட்­ட­தாக சிவ­சேனா மூத்த தலை­வர் சஞ்­சய் ராவத் தெரி­வித்­துள்­ளார்.

அனில் தேஷ்­முக்கை தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத் பவார்­தான் தேர்வு செய்­தார் என்றும் இது எதிர்­பா­ராத விபத்து போன்­றது என்­றும் அவர் மேலும் கூறி­யுள்­ளார்.

சஞ்­சய் ராவத்­தின் இந்­தப் பேச்சு தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளுக்கு கடும் எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக மும்பை ஊடகங்­கள் தெரி­விக்­கின்­றன.

கூட்­டணி அரசு சிறப்­பாகச் செயல்­படும் வேளை­யில் அதை கெடுக்­கும் வகை­யில் யாரும் செயல்­ப­டக் கூடாது என தேசி­ய­வாத காங்­கி­ர­சின் மூத்த தலை­வரான அஜித் பவார் கூறி­யுள்­ளார்.

லஞ்ச குற்­றச்­சாட்­டில் சிக்­கி­யுள்ள, மகா­ராஷ்­டிரா உள்­துறை அமைச்­சர் அனில் தேஷ்­முக் கூறு­கை­யில், தம் ­மீ­தான ஊழல் குற்­றச்­சாட்டு குறித்து உரிய விசா­ர­ணையை மேற்­கொள்­ளும்­படி முதல்­வ­ரைக் கேட்­டுக் கொண்­ட­தா­க­வும் உண்மை விரை­வில் வெளிப்­படும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

இத்­த­கைய பர­ப­ரப்­பான சூழ்­நி­லை­யில் தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத்­ப­வா­ரும் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவும் நேரில் சந்­தித்­துப் பேசி­யுள்­ள­னர்.

இதை­ய­டுத்து தேசி­ய­வாத காங்­கி­ர­சும் பாஜ­க­வும் இணைந்து ஆட்­சி­ய­மைக்க திட்­ட­மி­டு­வ­தாக ஒரு தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

இது­கு­றித்து சரத்­ப­வா­ரி­டம் செய்­தி­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­ய­போது, அனைத்து விஷ­யங்­க­ளை­யும் வெளி­யில் சொல்ல வேண்டிய அவ­சியம் இல்லை என்று கூறி­யுள்­ளார்.