தேர்தல்: நாடு திரும்பிய 1.2 மில்லியன் பேரால் பெரும் தாக்கம் இருக்கும்

தேர்தல்: நாடு திரும்பிய 1.2 மில்லியன் பேரால் பெரும் தாக்கம் இருக்கும்

2 mins read
1f921cdd-06da-49ec-ae7b-ae03e22aaa62
-

திரு­வ­னந்­த­பு­ரம்: பல்­வேறு உலக நாடு­களில் பணி­யாற்றி வந்த 1.2 மில்­லி­யன் கேரள மக்­கள் கொரோனா விவ­கா­ரத்­தால் நாடு திரும்­பி­யுள்­ள­னர். இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் தங்­கள் வேலையை இழந்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

வேலை இழப்பு தங்­கள் வாழ்க்­கையை தலை­கீ­ழாக புரட்­டிப் போட்­டி­ருப்­ப­தாக அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கேர­ளா­வைச் சேர்ந்த நான்கு மில்­லி­யன் பேர் வெளி­நா­டு­களில் வசித்­தும் வேலை பார்த்­தும் வரு­கி­றார்­கள். பெரும்­பா­லா­ன­வர்­கள் மத்­திய கிழக்கு நாடு­களில் பணி­யாற்­று­கின்­ற­னர்.

கேர­ளா­வில் ஐந்து குடும்­பங்­களில் ஒரு­வர் வீதம் வெளி­நா­டு­களில் பணி­யாற்­று­வ­தால் அம்­மா­நி­லத்­தின் ஜிடி­பி­யில் அவர்­க­ளின் பங்­க­ளிப்பு 36 விழுக்­கா­டாக உள்­ளது.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் சுஹைல் பட்­டன்­மார் என்ற 31 வயது இளை­ய­ரும் கடந்த டிசம்­ப­ரில் கேரளா திரும்­பி­யுள்­ளார்.

தனது மூன்று இளைய சகோ­த­ரர்­கள், நான்கு நெருங்­கிய நண்­பர்­கள் வளை­குடா நாடு­களில் பணி­யாற்றி வந்­த­தா­க­வும் தொற்­றுப்­ப­ர­வல் விவ­கா­ரத்­தால் ஏழு பேரும் வேலையை இழந்து நாடு திரும்­பி­யுள்­ள­னர் என்­றும் கூறு­கி­றார் சுஹைல்.

தமக்கு குறைந்­த­பட்­சம் வீட்­டில் இருந்து பணி­யாற்­றும் வாய்ப்­பே­னும் கிடைத்­துள்­ளது என்று அவர் கூறு­கி­றார்.

கேர­ளா­வில் வறுமை ஒழிப்பு நட­வ­டிக்­கை­யில் வெளி­நாடு வாழ் கேரள மக்­க­ளின் பங்­க­ளிப்பு அதி­கம் என்­கி­றார் அம்­மா­நி­லத்­தைச் சேர்ந்த குடி­பெ­யர்வு ஆய்­வா­ளர் இரு­தய ராஜன்.

"வெளி­நாடு சென்­ற­வர்­கள் ஈட்­டிய பணத்­தில்­தான் அவர்­க­ளின் குடும்­பத்­தார் வீடு­க­ளைக் கட்­டி­யுள்­ள­னர். அடுத்த தலை­மு­றையை படிக்க வைத்­துள்­ள­னர். எனவே நாடு திரும்­பி­விட்­டா­லும் அர­சி­யல், பொரு­ளா­தா­ரத் தளங்­களில் அவர்­க­ளுக்­கு­ரிய முக்­கி­யத்­து­வம் இப்­போ­தும் நீடிக்­கிறது.

"வேலை­யி­ழந்து திரும்­பிய அனை­வ­ருமே புது வேலையை தேடிக் கொள்­வ­தில் முனைப்­பாக உள்­ள­னர். வேலை கிடைப்­பது தாம­தமா­கும்­போது விரக்தி ஏற்­ப­டு­கிறது. நாடு திரும்­பும்­போது தங்­கள் மாநி­லத்­தில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடக்­கும் என்றோ, தாங்­களும் வாக்­க­ளிக்­கப் போவதோ பெரும்­பா­லா­னோ­ருக்­குத் தெரி­யாது.

"எனவே 1.2 மில்­லி­யன் மக்­கள் அளிக்­கப்­போ­கும் வாக்கு தேர்­தல் முடி­வு­களில் நிச்­ச­யம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்," என்­கி­றார் ராஜன்.

மாநி­லத்­தின் தற்­போ­தைய சூழ்­நி­லைக்கு ஏற்ப சமூக வலைத்­த­ளங்­களில் விவா­தங்­கள், கருத்து பரி­மாற்­றங்­கள் நடந்து வரு­கின்­றன. அவற்­றுள் மேற்­கு­றிப்­பிட்ட 1.2 மில்­லி­யன் பேரும்­கூட பங்­கேற்­கும் வாய்ப்­புண்டு.

வெளி­நா­டு­களில் இருந்து திரும்­பிய இவர்­கள் அளிக்­கப்­போ­கும் ஆத­ரவு எந்த கட்சி ஆட்­சி­ய­மைக்­கும் என்­ப­தில் முக்­கிய பங்கு வகிக்­கும் என்­கி­றார்­கள் அர­சி­யல் களப் பார்­வை­யா­ளர்­கள்.