தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மம்தா: ரவுடிகளை அழைத்து வந்து தாக்குதல் நடத்துகிறார்கள்

2 mins read
0a3cd8c8-e58c-4dd8-ba7d-972deb41325b
நந்திகிராம் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பாத யாத்திரையில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அவர் எட்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தார். படம்: ஊடகம் -

திரிணாமுல் காங்கிரசார் தேர்தல் களத்தில் தடுமாறுவதாக பாஜக விமர்சனம்

கோல்­கத்தா: பீகார், உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் இருந்து எதிர்க்­கட்­சி­யி­னர் ரவு­டி­களை அழைத்து வந்து தம் மீது தாக்­கு­தல் நடத்­து­வ­தாக மேற்கு­வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி குற்­றம்­சாட்டி உள்­ளார்.

நேற்று முன்­தி­னம் தாம் போட்­டி­யி­டும் நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் பிர­சா­ரம் மேற்­கொண்ட அவர், சுதந்­தி­ர­மான, வெளிப்­ப­டை­யான தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்­பதே திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் விருப்­பம் என்­றார்.

"அவர்­கள் (எதிர்க்­கட்­சி­யி­னர்) வந்­தால் பெண்­கள் பாத்­தி­ரங்­களை கொண்டு அடிக்க வேண்­டும். கலாச்­சா­ரம் மீது அன்பு கொள்­ளா­த­வர்­கள் இங்கு அர­சி­யல் செய்ய முடி­யாது. நந்­தி­கி­ரா­மில் ரவு­டித்­த­னம் காணப்­படு­கிறது.

"என்­னா­லும் விளை­யாட்­டு­களை விளை­யாட முடி­யும். நான் வங்­கப்­புலி. என்­னால் சிங்­கம் போல­வும் பதி­லடி கொடுக்க முடி­யும்," என்று மம்தா பானர்ஜி ஆவே­ச­மு­டன் பேசி­னார்.

முன்­ன­தாக நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் பிர­மாண்ட பிர­சாரப் பேரணி ஒன்று நடத்­தப்­பட்­டது. காலில் அடி­பட்­ட­தால் சக்­கர நாற்­கா­லி­யில் அமர்ந்­த­படி இந்­தப் பேர­ணி­யில் கலந்து கொண்­டார் மம்தா.

மேலும், எட்டு கிலோ மீட்­டர் தூரத்தை அவர் சக்­கர நாற்­கா­லி­யில் அமர்ந்­த­ப­டியே கடந்­தார்.

இதற்­கி­டையே வெளி­நாட்டு மண்­ணில் இருந்­த­படி பிர­த­மர் மோடி மட்­டும் பிர­சா­ரம் செய்­ய­லாமா? என மம்தா கேள்வி எழுப்பி உள்­ளார்.

பங்­ளா­தேஷ் பய­ணத்­தின்­போது மறை­மு­க­மாக தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­ட­தால் பிர­த­மர் மோடி­யின் கடப்­பி­தழ், விசாவை ஏன் ரத்து செய்­யக்­கூ­டாது என்­றும் கேள்வி எழுப்­பி­யுள்ள அவர், இது தொடர்­பாக தேர்­தல் ஆணை­யத்­தில் புகார் அளிக்­கப்­படும் என்­றார்.

இதற்­கி­டையே மம்தா பானர்­ஜி­யின் குற்­றச்­சாட்­டு­களை பாஜக திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்­ளது.

பாஜக தகுந்த ஆதா­ரங்­க­ளு­டன் மம்தா ஆட்­சி­யின் தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்டி வரு­வ­தால் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் தேர்­தல் பிர­சா­ரத்­தில் தடு­மா­று­வ­தாக மேற்கு வங்க பாஜக பிர­மு­கர்­கள் கூறி­யுள்­ள­னர். இரு­த­ரப்­புக்­கும் இடை­யே­யான வார்த்­தைப்­போர் உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளது.