புதுடெல்லி: பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியாவுக்கு வர இருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு பிரான்சிடம் இருந்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவத்றகான ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது. அதன்படி பல்வேறு கட்டங்களாக இந்த விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நான்காம் கட்டமாக இன்று மூன்று விமானங்கள் வந்து சேர உள்ளன.

