அடம்பிடித்த 92 வயது மூதாட்டி

அடம்பிடித்த 92 வயது மூதாட்டி

1 mins read
355790ff-4805-4ca6-ba1c-04d5ea66a499
-

திரு­வ­னந்­த­புரம்: கேரளாவின் கோட்­ட­யம் மாவட்­டத்­தைச் சேர்ந்த மூதாட்டி பவானி அம்மா (படம்) அஞ்­சல் வாக்கு செலுத்த விருப்­பம் தெரி­வித்­தி­ருந்­தார்.

நேற்று முன்­தி­னம் வாக்­குச்­சீட்டைப் பெற தேர்­தல் அதி­கா­ரி­கள் ஒரு பையு­டன் சென்­றி­ருந்­த­னர்.

ஆனால் அதைக்­கண்ட 92 வயது மூதாட்டி பவானி அந்­தப் பையில் வாக்­குச்­சீட்­டைப் போட்­டால் அது பாது­காப்­பாக இருக்­காது என்று கூறி தனது வாக்­கைச் செலுத்த மறுத்­துள்­ளார். அதி­கா­ரி­கள் பல­வி­த­மாக சமா­தா­னப்­ப­டுத்த முயன்­றும் மூதாட்டி பிடி­வா­தத்­தைக் கைவி­ட­வில்லை. இறு­தி­யில் மாவட்ட ஆட்சி­யர் அவ­ரைத் தொடர்புகொண்டு பேசிய பிறகே அவர் தனது அஞ்­சல் வாக்­கைச் செலுத்­தி­னார்.