புதுடெல்லி: புதிய மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
"கடந்த மாதம் 19ஆம் தேதி எங்களது அறிக்கையை மூடிய உறையில் வைத்து, உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துவிட்டோம்," என்று குழு உறுப்பினர்களில் ஒருவரான வேளாண் பொருளியலாளர் அனில் கண்வத் தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பல மாநில விவசாயிகள் நான்கு மாதங்களாகப் போராடி வருகின்றனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அம்மூன்று சட்டங்களையும் மதிப்பிட திரு கண்வத், திரு அசோக் குலாட்டி, திரு பிரமோத் ஜோஷி ஆகியோரைக் கொண்ட குழுவை நியமித்தது. அக்குழு மொத்தம் 85 வேளாண் சங்கங்களிடமும் இதர பங்காளிகளிடத்திலும் கருத்துகளைக் கேட்டறிந்தது. அறிக்கை விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், வரும் 5ஆம் தேதி நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.

