அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அகமதாபாத் நகருக்கு அருகே இஸ்ரத் ஜகான் என்ற 19 வயதுப் பெண் உட்பட நால்வரை 'என்கவுன்டர்' மூலம் போலிசார் சுட்டுக்கொன்றனர். அவர்கள் நால்வரும் பயங்கரவாதிகள் என்றும் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய அவர்கள் திட்டம் தீட்டி வந்தனர் என்றும் போலிஸ் தெரிவித்தது. ஆயினும், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, அது 'போலி என்கவுன்டர்' என்பதைக் கண்டுபிடித்தது. அதைத் தொடர்ந்து, போலிஸ் அதிகாரிகள் பலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், ஜி.எல்.சிங்கால், தருண் பாரோட், அனாஜு சவுத்ரி ஆகிய மூன்று போலிஸ் அதிகாரிகளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.
போலி என்கவுன்டர் வழக்கு: போலிசார் மூவர் விடுவிப்பு
1 mins read
-

