எதிர்க்கட்சிகள் ஒன்று சேர அழைப்பு விடுத்த மம்தா

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர அழைப்பு விடுத்த மம்தா

2 mins read
24937aa4-0493-4758-9931-80221fa17052
மம்தா பானர்ஜி. படம்: ஊடகம் -

சோனியா, மு.க.ஸ்டாலின் உட்பட 15 தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்து

கோல்கத்தா: ஜன­நா­ய­கத்­தின் மீதும் நாட்­டின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் வழங்­கி­யுள்ள கூட்­டாட்­சித் தத்­து­வத்­தின் மீதும் பாஜக தொடர்ந்து தாக்­கு­தல் நடத்தி வரு­வ­தாக மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி குற்­றம்­சாட்டி உள்­ளார்.

இத்­தாக்­கு­த­லில் இருந்து தற்­காத்­துக்கொள்ள பாஜக ஆளாத மாநி­லங்­களில் இருக்­கும் தலை­வர்­கள் ஒன்­று­சேர வேண்­டும் என அவர் அழைப்பு விடுத்­துள்­ளார்.

தமது இந்த கோரிக்­கையை வலி­யு­றுத்தி காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி, திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் உள்­ளிட்ட 15 தலை­வர்­க­ளுக்கு முதல்­வர் மம்தா கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

சரத் பவார், அகி­லேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மாநில முதல்­வர்­கள் உத்­தவ் தாக்­கரே, கெஜ்­ரி­வால், சிபு­சோ­ரன், நவீன் பட்­நா­யக், ஜெகன்­மோ­கன் ரெட்டி உள்­ளிட்­டோ­ருக்கு அனுப்­பிய கடி­தத்­தில், தமது கவலை­க­ளைத் தெரி­விக்­கும் வித­மாக எழு­தி­ய­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேற்கு வங்­கத்­தில் இரண்­டாம் கட்­டத்­தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­திவு இன்று நடை­பெற உள்ள நிலை­யில், மம்தா எழு­தி­யுள்ள கடி­தம் முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது.

"தங்­க­ளு­டைய சொந்த இலக்­கு­க­ளுக்­காக மத்­தி­யில் ஆளும் பாஜக அரசு, விசா­ரணை அமைப்­பு­க­ளான சிபிஐ, அம­லாக்­கப் பிரிவு, தேசிய புல­னாய்வு முகமை ஆகி­ய­வற்­றின் மூலம், பாஜக அல்­லாத தலை­வர்­க­ளுக்­கும் பல்­வேறு அமைப்­பு­க­ளுக்­கும் எதி­ரா­கச் செயல்­பட வைக்­கி­றார்­கள்.

"குறிப்­பா­கத் தமி­ழ­கம், மேற்கு வங்­கத்­தில் தேர்­தல் நடக்­கும் நிலை­யில் இரு கட்­சி­க­ளின் முக்­கி­யத் தலை­வர்­கள் வீடு­களில் அம­லாக்­கப் பிரிவு மூலம் சோத­னை­யிட வைக்­கிறது. இந்த சோதனை பாஜக அல்­லாத தலை­வர்­க­ளின் வீடு­க­ளில்­தான் நடந்­துள்­ளது," என மம்தா பானர்ஜி மேலும் தெரி­வித்­துள்­ளார்.

மத்திய அரசு திட்­ட­மிட்டே, பாஜக ஆட்சி அல்­லாத மாநி­லங்­க­ளுக்­குச் சேர வேண்­டிய நிதியை நிறுத்தி வைப்­ப­தா­கக் குற்­றம்­சாட்டி உள்ள அவர், இத­னால், மக்­கள் நல­னுக்­குத் தேவை­யான நலத்­திட்­டங்­கள், வளர்ச்­சித் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­வ­தில் சிக்­கலை எதிர்­கொள்­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தேசிய மேம்­பாட்டுக் கவுன்சில், மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான கவுன்­சில், திட்­டக்­குழு ஆகி­ய­வற்றை மோடி அரசு கலைத்து­விட்டு அதி­கா­ர­மில்­லாத நிதி ஆயோக் அமைப்பை மத்­திய அரசு உரு­வாக்­கி­யுள்­ளது.

"மாநில அர­சு­கள் தங்­கள் குறை­கள், தேவை­கள், கவ­லை­கள் அனைத்­தை­யும் தெரி­வித்து வந்த துறை­கள் அனைத்­தை­யும் மோடி அரசு செயல்­ப­டா­மல் வைத்­து­விட்­டது," என மம்தா கூறி­யுள்­ளார்.

மொத்­தத்­தில் மத்­திய, மாநில அர­சு­க­ளின் உற­வு­கள், மாநி­லத்­தில் ஆளும் கட்சி, எதிர்க்­கட்சி, மத்­திய அரசு ஆகி­ய­வற்­றின் உற­வு­கள் வர­லாற்­றில் இதை­விட மோச­மா­கச் சென்­ற­தில்லை என்­றும் இவை அனைத்­துக்­கும் பிர­த­மர் மோடி­யின் சர்­வா­தி­கா­ரப் போக்­கு­தான் கார­ணம் என்­றும் முதல்­வர் மம்தா சாடி உள்­ளார்.