தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளாவில் 4.34 லட்சம் போலி வாக்காளர்கள்: காங்கிரஸ் அம்பலம்

1 mins read
ff64e4ea-0c4a-4372-a0f8-7bf3f6d72860
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில் போலி வாக்­கா­ளர்­கள் அதி­க­ள­வில் இருப்­ப­தாக காங்­கி­ரஸ் தொடர்ந்து குற்­றம்­சாட்டி வரு­கிறது.

இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரணை நடத்­திய கேரள உயர் நீதி­மன்­றம், போலி வாக்­கா­ளர்­களை உட­ன­டி­யாக களை­யு­மாறு தேர்­தல் ஆணை­யத்­துக்கு உத்­த­ர­விட்­டது.

அதன்­படி ஆய்வு மேற்­கொண்ட தேர்­தல் ஆணை­யம், 38,000 போலி வாக்­கா­ளர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், கேர­ளா­வில் 4.34 லட்­சம் பேர் அடங்­கிய போலி வாக்­கா­ளர் பட்­டி­யலை எதிர்க் கட்­சித் தலை­வர் ரமேஷ் சென்­னி­தலா வியா­ழக்­கி­ழமை வெளி­யிட்­டார்.

காங்­கி­ரஸ் உரு­வாக்­கி­யுள்ள 'ஆப்­ப­ரே­ஷன் ட்வின்ஸ்' என்ற இணை­யப் பக்­கத்­தில் இந்­தப் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கிறது. ஒரே மாதி­ரி­யான புகைப்­ப­டத்­து­டன் வெவ்­வேறு பெயர்­க­ளைக் கொண்ட வாக்­கா­ளர்­கள் இப்­பட்­டி­ய­லில் காணப்படுகின்றனர்.

இதைப்போல மேலும் பல போலி வாக்­கா­ளர் பட்­டி­யல்­கள் விரைவில் வெளி­யா­கும் என ரமேஷ் கூறி­யுள்­ளார்.