தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம்: ராகுல் காந்தி உறுதி

1 mins read
a5e240b4-338a-40ed-bfd1-ae1d45990804
பிரசாரக் கூட்டத்தின் மேடையில் ஒரு குழந்தையுடன் ராகுல் காந்தி இயல்பாக உரையாடினார். படம்: ஊடகம் -

திரு­வ­னந்­தபுரம்: மத்­திய அரசு வழங்­கும் உத­வித்­தொகை ஏழை எளிய மக்­க­ளின் கைக­ளைச் சென்­ற­டைய வேண்­டும் என்­பதே காங்­கி­ரஸ் கட்சி­யின் விருப்­பம் என அக்­கட்சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

கேர­ளா­வில் உள்ள அனைத்து ஏழை மக்­க­ளுக்­கும் மாதந்­தோ­றும் 6,000 ரூபாய் உத­வித்­தொ­கை­யாக வழங்­கப்­படும் என தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது அவர் வாக்­கு­றுதி அளித்­தார்.

தமி­ழ­கத்­தைப் போலவே கேர­ளா­வி­லும் இன்று ஒரே கட்­ட­மாக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இந்­நி­லை­யில் இறு­திக்­கட்­டப் பிர­சா­ரத்­தின்­போது அர­சி­யல் கட்­சி­கள் வாக்­கா­ளர்­களுக்கு பல்­வேறு வாக்­கு­றுதிகளை வாரி வழங்­கி­னர். வெள்­ள­முண்டா என்ற பகு­தி­யில் மேற்­கொண்ட பிர­சா­ரத்­தின்­போது ஏழை­க­ளுக்கு உத­வித்­தொகை வழங்­கு­வது குறித்து ராகுல் குறிப்­பிட்­டார்.

"நாட்­டின் எந்த மாநி­லத்­தி­லும் இது­வரை நடந்­தி­ராத ஒன்றை கேர­ளா­வில் புரட்­சி­க­ர­மாக நடத்­திக்­காட்ட காங்­கி­ரஸ் கூட்­டணி விரும்­பு­கிறது. அந்த வகை­யில் கேர­ளா­வில் ஏழை எளிய மக்­க­ளுடைய கைக­ளுக்கு அர­சுப்­ப­ணம் போய்ச்­சேர வேண்­டும் என்று நினைக்­கி­றோம்.

"கேர­ளா­வில் நாங்­கள் ஆட்சிக்கு வந்­தால் ஒவ்­வொரு ஏழை­யும் மாதம் ஒன்­றுக்கு ரூ.6 ஆயி­ரம் பெறு­வார்­கள். இதன் மூலம் ஆண்­டுக்கு ரூ.72 ஆயி­ரம் கிடைக்­கும். ஒரு­மா­தம் கூட தவ­றா­மல் அவர்­க­ளின் வங்கிக் கணக்­கில் இந்த தொகை செலுத்­தப்­பட்­டு­வி­டும்," என்­றார் ராகுல்.

இத்­திட்­டம் கேர­ளா­வில் வெற்றி­க­ர­மா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்­டால் பின்­னர் காங்­கி­ரஸ் ஆளும் மற்ற மாநி­லங்­க­ளி­லும் நடை­மு­றைப்­படுத்­தப்­பட வேண்­டும் என ராகுல் விரும்­பு­வ­தாக காங்­கி­ரஸ் வட்­டாரங்­கள் தெரி­விக்­கின்­றன.