ஐஎம்எஃப் கணிப்பு: இந்தியா 12.5% பொருளியல் வளர்ச்சி காணும்

1 mins read
90f80ddf-8229-4a1f-bbdf-236faa3849ef
-

புது­டெல்லி: கொரோனா விவ­கா­ரத்­துக்கு மத்­தி­யில் இந்­தி­யா­வின் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யா­னது நடப்­பாண்­டில் 12.5 விழுக்­கா­டாக இருக்­கும் என அனைத்­து­லக பண நிதி­யம் (ஐஎம்­எஃப்) கணித்­துள்­ளது.

இந்த வளர்ச்சி விகி­த­மா­னது வளர்ந்த, வள­ரும் பொரு­ளா­தா­ரத்­தைக் கொண்ட நாடு­க­ளின் வளர்ச்சி விகி­தத்­தை­விட அதி­க­மா­கும்.

கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் கார­ண­மாக கிட்­டத்­தட்ட அனைத்து உலக நாடு­களும் கடும் பொரு­ளி­யல் பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்­ளன. பாதிப்பு குறைந்­து­வ­ரும் நாடு­களில் இப்­போ­து­தான் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் இயல்­பு­நி­லைக்கு திரும்­பி­யுள்­ளன.

இந்­தி­யா­வில் கொரோனா முதல் அலைக்­குப் பிறகு ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டன. இத­னால் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் வேக­ம­டைந்­தன.

இந்­நி­லை­யில் கடந்த ஜன­வரி மாதம் பல்­வேறு நாடு­க­ளின் பொரு­ளி­யல் நில­வ­ரம் குறித்து அனைத்­து­லக பண நிதி­யம் தனது கணிப்­பு­களை வெளி­யிட்­டது. அதன்­படி, 2021-22ஆம் நிதி­யாண்­டில் இந்­தியா 11.5 விழுக்­காடு அள­விற்கு பொரு­ளா­தார வளர்ச்சி காணும் என்று அந்­நி­தி­யம் தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில் அண்­மைய கணிப்­பின்­போது இந்­தி­யா­வின் வளர்ச்சி விகி­த­மா­னது 12.5 விழுக்­கா­டாக அதி­க­ரிக்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுமார் இரண்டு மாத காலத்­துக்­குள் ஒரு விழுக்­காடு கூடு­தல் வளர்ச்­சியை இந்­தியா அடை­யும் என ஐஎம்­எஃப் கணித்­துள்­ளது.

இதே போல் 2022-23ஆம் ஆண்டிலும் இந்­திய பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தம் அதிகரிக்கலாம் என­வும் அந்­நி­தி­யம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே இந்­தியா, அமெ­ரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடு­களும் உலக பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான உந்­து­சக்­தி­யாக உள்­ளன என்று உலக வங்கி தெரி­வித்­துள்­ளது.