தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முத்தம் கேட்ட பயணி மீது வழக்குப் பதிவு

1 mins read
c8e948b7-acf2-42de-952b-aa0e1ea63889
-

புது­டெல்லி: விமா­னத்­தில் நிர்­வா­ணக் கோலத்­தில் முத்­தம் கேட்ட பயணி மீது போலி­சார் வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர்.

புது­டெல்­லி­யி­லி­ருந்து பெங்­க­ளூ­ருக்­குப் புறப்­பட்ட விமா­னத்­தில் நடந்த சம்­ப­வத்­தால் பய­ணி­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். விமா­னம் புறப்­பட்ட சிறிது நேரத்­தில் அதி­லி­ருந்து ஆண் பயணி தன் ஆடை­களை அவிழ்த்து நிர்­வா­ண­மாக நின்­றார். பின்­னர் விமா­னப் பணிப்­பெண்­க­ளி­டம் சென்று அவர் முத்­தம் கேட்­டுள்­ளார்.

அவர் போதை­யில் கேட்­டி­ருக்­க­லாம் என்று ஊழி­யர்­கள் சந்­தே­கித்­த­னர்.

ஆனால் அந்த நபர் விமா­னக் குழு­வி­ன­ரி­டம் மன்­னிப்பு கேட்டு உடை­களை அணிந்து இருக்­கை­யில் அமர்ந்­தார்.

பெங்­க­ளூ­ரில் விமா­னம் தரை­யி­றங்­கி­ய­தும் அந்த நபர் மீண்­டும் தன் உடை­களை அவிழ்த்து நிர்­வா­ண­மாக நின்­றார். அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்­தி­ய­தால் அந்த நபர் தன் உடை­களை மீண்­டும் அணிந்­தார்.

இதை­ய­டுத்து அந்த நபர் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டது.

அடுத்த 30 நாட்­க­ளுக்கு விமா­னத்­தில் பய­ணிக்க அவ­ருக்கு தடை விதிப்­பது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கிறது.