மகாராஷ்டிரா: வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

2 mins read
db0da1cd-f3ad-459c-a8b2-6afcdecc78a9
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் எந்த நேரத்­தி­லும் முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்ற அச்­சம் கார­ண­மாக அம்­மா­நி­லத்­தில் இருந்து புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வேக­மாக வெளி­யேறி வரு­கின்­ற­னர்.

அம்­மா­நி­லத்­தில் கொரோனா தடுப்­பூ­சிப் பற்­றாக்­குறை அதி­க­ரித்­துள்­ள­தும் தொழி­லா­ளர்­க­ளின் அச்­சத்­திற்கு கார­ண­மாகி உள்­ளது.

அதிக பாதிப்­புள்ள மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் மகா­ராஷ்­டிரா தொடர்ந்து முதல் இடத்­தில் உள்­ளது. தினந்­தோ­றும் ஐம்­ப­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வதை அடுத்து அங்கு வார இறுதி நாள்­களில் முழு ஊர­டங்கு அம­லுக்கு வந்­துள்­ளது.

எனி­னும் பாதிப்பு அதி­க­ரிக்­கும் பட்­சத்­தில் மிக விரை­வில் அங்கு வார நாள்­க­ளி­லும் முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட வாய்ப்­புள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த அச்­சம் கார­ண­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் இருந்து வெளி­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் வேக­மாக வெளி­யேறி வரு­கின்­ற­னர். கடந்த ஆண்டு ஊர­டங்­கின்­போது புலம்­பெயர் தொழி­லா­ளர்­கள் அதி­க­முள்ள மகா­ராஷ்­டிரா உள்­ளிட்ட மாநி­லங்­களில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடி­யா­மல் லட்­சக்­க­ணக்­கான புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் தவிப்­புக்கு ஆளா­கி­னர்.

பலர் சில நூறு கிலோ மீட்­டர் தூரத்தை நடந்தே கடந்து சொந்த ஊர் திரும்­பி­ய­தாக ஊட­கங்­களில் பல்­வேறு செய்­தி­கள் இடம்­பெற்­றன.

இந்­நி­லை­யில் மீண்­டும் அதே போன்ற சிக்­க­லுக்கு ஆட்­ப­டக்­கூடாது என்­ப­தால் முன்­கூட்­டியே மகா­ராஷ்­டி­ராவை விட்டு வெளி­மாநிலத் தொழி­லா­ளர்­கள் வெளி­யேற முடிவு செய்­துள்­ள­னர்.

கடந்த சில தினங்­க­ளாக மகா­ராஷ்­டி­ரா­வில் இருந்து வெளி­மா­நி­லங்­களை நோக்­கிச் செல்­லும் வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

கார், வேன்­கள், டிராக்­டர்­கள், ஆட்­டோக்­களில் தொழி­லா­ளர்­கள் பய­ணம் மேற்­கொள்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் கொரோனா தடுப்­பூ­சி­க­ளுக்கு மகா­ராஷ்­டி­ரா­வில் தட்­டுப்­பாடு நில­வு­கிறது. இத­னால் தடுப்­பூசி போடும் மையங்­கள் பல மூடப்­பட்­டுள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.

மும்­பை­யில் உள்ள 71 தனி­யார் மையங்­களில் 25 மையங்­கள் மூடப்­பட்­டன. அனைத்து மாநி­லங்­க­ளி­லும் அடுத்த ஐந்து நாள்­க­ளுக்கு மட்­டுமே தடுப்­பூ­சி­கள் கையி­ருப்­பில் உள்­ள­தாக இந்­திய நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

எனவே தங்­க­ளுக்கு தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் வாய்ப்­பில்லை என்­பது தெரிய வந்­தி­ருப்­ப­தும் புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­க­ளுக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­கத் தெரி­கிறது.

முழு ஊரடங்குக்கு வாய்ப்பு; தடுப்பூசி பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கானோர் அச்சம்