சீனாவுடன் பேச்சுவார்த்தை: இந்தியா திட்டவட்டம்

சீனாவுடன் பேச்சுவார்த்தை: இந்தியா திட்டவட்டம்

2 mins read
be7feef6-9620-4b17-af32-dde1aa0eae0a
-

புது­டெல்லி: எல்­லைப் பிரச்­சினை தொடர்­பாக இந்­தியா, சீனா இடையே அடுத்­த­கட்­டப் பேச்­சு­வார்த்தை நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

அப்­போது கிழக்கு லடாக் பகு­தி­யில் இருந்து இரு­த­ரப்­பும் படை­களை முழு­வ­து­மாக திரும்­பப்­பெ­று­வது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கின்­றன.

கடந்­தாண்டு ஏப்­ரல் மாதம் முதல் சீன ராணு­வம் எல்­லைப் பகு­தி­யில் அத்­து­மீற முயன்­ற­தா­க­வும் படை­களைக் குவிப்­ப­தா­க­வும் இந்­தியா தரப்­பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

இதை சீனா திட்­ட­வட்­ட­மாக மறுத்த நிலை­யில் மே மாதம் இரு­த­ரப்­புக்­கும் இடையே நடந்த மோதல் கார­ண­மாக எல்­லை­யில் பதற்­றம் நில­வி­யது. இதை­ய­டுத்து இரு நாடு­களும் அமைதி ஏற்­ப­டுத்து­வதற்­கான வழி­வ­கை­கள் குறித்து ஆலோ­சிக்க முன்­வந்­தன.

இது­வரை இரு நாட்டு ராணுவ அதி­கா­ரி­களும் பத்து முறை சந்­தித்­துப் பேச்­சு­வார்த்தை நடத்­திய நிலை­யில் நேற்று முன்­தி­னம் 11வது சுற்­றுப் பேச்­சு­வார்த்தை நடந்­தது.

அப்­போது பங்­கோங் சோ ஏரிப் பகு­தி­யில் இருந்து சீனா படை­களை விலக்­கிக்­கொண்­டதை வர­வேற்ற இந்­திய தரப்பு அதே­போல் பிற பகு­தி­களில் இருந்­தும் படை­க­ளைத் திரும்­பப்­பெற வலி­யு­றுத்­தி­யது.

குறிப்­பாக ஹாட்ஸ்­பி­ரிங்ஸ், கோக்ரா, தேப்­சாங் சம­வெளி உள்­ளிட்ட சர்ச்­சைக்­கு­ரிய பகு­தி­களில் இருந்து சீனா தனது படை­களை முற்­றி­லு­மாக திரும்­பப்­பெற வேண்­டும் என இந்­திய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நேற்று முன்­தி­னம் காலை 10.30 மணி­ய­ள­வில் தொடங்­கிய பேச்­சு­வார்த்தை 11 மணி­ நே­ரத்­துக்­கும் மேலாக நீடித்­தது.

அப்­போது இந்­தி­யா­வின் எதிர்­பார்ப்பு குறித்து சீன தரப்­புக்கு திட்­ட­வட்­டாக எடுத்­து­ரைக்­கப்­பட்­டது என்­றும் எல்­லைப் பகு­தி­களில் கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­துக்கு முன்­பி­ருந்த சூழலை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்றும் இந்­தியை வலியுறுத்­தி­ய­தா­க­ தெரி­கிறது.

பேச்­சு­வார்த்­தை­யில் விவா­திக்­கப்­பட்ட அம்­சங்­கள் குறித்து அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் ஏதும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.