வீரரை துன்புறுத்தாமல் ஒப்படைத்த மாவோயிஸ்டுகள்

வீரரை துன்புறுத்தாமல் ஒப்படைத்த மாவோயிஸ்டுகள்

1 mins read
7bcc483e-86dd-4457-9cb4-0245d94a60cf
போலிசாரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட வீரர். படம்: ஊடகம் -

ராய்ப்­பூர்: தங்­க­ளி­டம் சிக்­கிய மத்திய ரிசர்வ் போலிஸ் படை­யின் அதிரடிப் பிரி­வைச் சேர்ந்த வீரரை எந்த வகை­யி­லும் துன்­பு­றுத்­த­வில்லை என மாவோ­யிஸ்­டு­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சத்­தீஸ்­க­ரில் அண்­மை­யில் பாது­காப்­புப் படை­யி­ன­ரு­டன் மோதி­ய­போது ராகேஷ்­வர் சிங் என்ற வீரரை மயக்க நிலை­யில் தாங்­கள் சிறைப்­பிடித்­த­தாக அவர்­கள் குறிப்­பிட்­ட­னர். தாங்­கள் பின்­பற்­றும் நன்­னெ­றி­களின் அடிப்­ப­டை­யில் அந்த வீரரை தாக்­க­வில்லை என்று ராகேஷ்­வர் சிங்கை மீட்க வந்த குழு­வி­ன­ரி­டம் அவரை ஒப்­ப­டைத்­த­போது மாவோ­யிஸ்­டு­கள் தெரிவித்த­னர்.

வீரர் ராகேஷ்­வர் சிங்கை மீட்க அமைக்­கப்­பட்ட குழு­வில் சமூக ஆர்­வ­லர்­க­ளான 91 வயது தரம்­பால் சைனி, தெல்­லம் போரையா தவிர ஏழு ஊட­க­வி­ய­லா­ளர்­களும் இடம்­பெற்­றி­ருந்­த­னர்.

"எங்­களை ஒரு வனப்­ப­குதி கிரா­மத்­துக்கு வரு­மாறு மாவோ­யிஸ்­டு­கள் கூறி­னர். இரு ­சக்கர வாக­னங்­களில் நான்கு மணி­நே­ரம் பய­ணம் செய்து அங்கு சென்­றோம்.

"சுமார் ஐந்து மணி­ நேர காத்­தி­ருப்­புக்­குப் பின்­னர் அதி­ர­டிப்­ பி­ரிவு வீரரை 70க்கும் மேற்­பட்ட மாவோ­யிஸ்­டு­கள் அழைத்து வந்­த­னர். ராகேஷ்­வர் சிங்­கின் கைகள் கட்­டப்­பட்­டி­ருந்­தா­லும் அவரை அடித்து துன்­பு­றுத்­த­வில்லை என்று கூறி­னர்," என்­கி­றார் மீட்­புக்­கு­ழு­வில் இடம்­பெற்­றி­ருந்த செய்­தி­யா­ளர் மிஷ்ரா.

மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் எந்­த­வித நிபந்­த­னை­யும் இன்றி மாவோ­யிஸ்­டு­கள் ராகேஷ்­வர் சிங்கை விடு­வித்­த­தாக குறிப்­பிட்ட அவர், நீர்ப்­போக்­கால் பாதிக்­கப்­பட்ட வீர­ருக்கு மாவோ­யிஸ்­டு­கள் சிகிச்சை அளித்­த­தா­க­வும் தெரி­வித்­தார். இதற்­கி­டையே தமது மக­னின் வரவு தீபா­வ­ளிப் பண்­டிகை போன்ற உணர்வை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக ராகேஷ்­வர் சிங்­கின் தாயார் மகிழ்ச்சி தெரி­வித்­துள்­ளார்.