மம்தா: குண்டுகளுக்குப் பதிலாக வாக்குகள் பாயும் அமித் ஷா: பாஜக ஆட்சி வரும்; வன்செயல் ஒழியும்

மம்தா: குண்டுகளுக்குப் பதிலாக வாக்குகள் பாயும் அமித் ஷா: பாஜக ஆட்சி வரும்; வன்செயல் ஒழியும்

2 mins read
2aba8090-6abc-488f-9128-f9e6ece2db56
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மேற்கு வங்காளத்தில் நேற்று முழுமூச்சாகப் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாடியா மாவட்­டத்­தில் உள்ள சாந்­தி­பூ­ரில் ஒவ்­வொரு வீதி­யா­கச் சென்று மக்­க­ளை அவர் சந்தித்­தார். படம்: இந்திய ஊடகம் -

கோல்­கத்தா: மேற்கு வங்­காள மாநி­லம் இது­வரை எத்­த­னையோ சட்­ட­மன்­றத் தேர்­தல்­களைப் பார்த்­தி­ருக்­கிறது. ஆனால் இப்­போது நடக்­கும் ஒரு தேர்­த­லைப் போல் இரண்டு கட்­சி­க­ளுக்கு இடை­யில் கண்­மூடித்­த­ன­மான போட்­டா­போட்டி இது­வ­ரை­ இடம்­பெற்­ற­தில்லை என்று கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

அந்த மாநி­லத்­தில் உள்ள 294 சட்­ட­மன்ற இடங்­க­ளுக்கு மார்ச் 27 முதல் ஏப்­ரல் 29 வரை எட்டு கட்­டங்­க­ளாக வாக்­க­ளிப்பு நடக்­கிறது.

இது­வ­ரை­ நான்கு கட்ட வாக்­குப்­ப­திவு முடி­வ­டைந்து இருக்­கிறது. ஏப்­ரல் 17ஆம் தேதி ஐந்­தாம் கட்ட வாக்­குப்­ப­திவு நடக்­க­வி­ருக்­கிறது.

நான்­காம் கட்ட வாக்­குப்­ப­தி­வின் போது துப்­பாக்­கிச் சூடு கார­ண­மாக நான்கு பேர் மாண்ட சம்­ப­வம் பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெடுத்து வரு­கிறது.

அதிக எண்­ணிக்­கை­யில் மக்­கள் வாக்­க­ளிப்­ப­தால் நாளுக்கு நாள் பர­ப­ரப்பு கூடி வரு­கிறது.

மேற்கு வங்­கா­ளத்தை திரி­ணாமுல் காங்­கி­ரஸ் கட்சி ஆண்டு வரு­கிறது. தொடர்ந்து ஆட்­சியைத் தக்­க­வைத்­துக்கொள்ள முதல்­வர் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் பிரசாரம் செய்தபடி அரும்­பாடுபடு­கி­றார்.

அதே­வே­ளை­யில், அவ­ரி­ட­மிருந்து ஆட்­சியை எப்­ப­டி­யும் பறித்து­விட வேண்­டும் என்று பாஜக முழு­மூச்­சா­கக் களத்­தில் இறங்கி இருக்­கிறது. இப்­படி மேற்கு வங்­கா­ளத்­தில் நீயா, நானா போட்டா போட்டி சூடு­கி­ளப்பி வரும் நிலை­யில், பாஜக தேசிய தலை­வர் அமித் ஷா நேற்று தனது பிர­சார இயக்­கத்தை முடுக்­கி­விட்­டார்.

நாடியா மாவட்­டத்­தில் இருக்­கும் சாந்­தி­பூ­ரில் ஒவ்­வொரு வீதி­யா­கச் சென்று அவர் மக்­க­ளைச் சந்­தித்­தார். நேற்று மட்­டும் பல்­வேறு நிகழ்ச்­சி­களில் அவர் கலந்­து­கொள்ள இருந்­தார். பல பொதுக்கூட்டங்களில் பேச இருந்தார்.

சாந்­தி­பூ­ரில் மக்­க­ளி­டம் உரை­யாற்­றிய அமித் ஷா, மேற்கு வங்­கா­ளத்­தில் பாஜக ஆட்சி வந்­த­தும் அர­சி­யல் வன்­செ­யல் ஓய்ந்­து­வி­டும் என்று குறிப்­பிட்­டார்.

அர­சி­யல் வன்­செ­ய­லுக்கு ஆத­ரவு அளிக்­கும் வகை­யில் முதல்­வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் அர­சி­யல், மேற்கு வங்­காள மாநி­லத்­தின் கலா­சா­ரத்­துக்குப் பொருத்­த­மான ஒன்று அல்ல என்­றும் அமித் ஷா கார­சா­ர­மா­கப் பேசி­னார்.

அதே­வே­ளை­யில், தோல்வி பயத்­தில் பாஜக துப்­பாக்­கிச் சூடு நடத்து­வ­தா­க­வும் அதற்கு வாக்­கு­கள் மூலம் பதி­லடி கொடுக்­கப்­படும் என்­றும் முதல்­வர் மம்தா கடு­மை­யா­கக் கருத்­து­ரைத்­தார்.

சக்­கர நாற்­கா­லி­யில் அமர்ந்­த­படி பொதுக்கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட மம்தா, "நான் வங்­கா­ளப் புலி. நான் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்ட கூச் பெஹா­ருக்­குச் செல்ல அனு­ம­தி­யில்லை என்­கி­றார்­கள்.

"அத­னால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்குக் காணொளி வழி­யாக அனு­தா­பம் தெரி­வித்­தேன்," என்று கூறி­னார்.

"வாக்­க­ளிக்­கச் சென்­ற­வர்­களைச் சுட்­டுக் கொன்றுவிட்டனர். இது ஒரு படு­கொலை. இந்­தச் சதிக்கு உள்­துறை அமைச்­ச­ராக இருக்­கும் அமித் ஷாவே பொறுப்பு," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய போது மம்தா மிகவும் காட்டமாகத் தெரி­வித்­தார்.

துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்ட கூச் பெஹா­ருக்கு அர­சி­யல்­வா­தி­கள் யாரும் செல்­லக்­கூ­டாது என்று 72 மணி நேர தடையைத் தேர்­தல் ஆணை­யம் விதித்­துள்­ளது.