தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் பிரசாரம்: சந்திரபாபு நாயுடு மீது கல்வீசி தாக்குதல்

1 mins read
dfa17e52-11d6-4d30-bb03-84e482e3bdc3
-

அம­ரா­வதி: திருப்­ப­தி­யில் தேர்­தல் பிர­சா­ரம் மேற்­கொண்ட ஆந்­திர முன்­னாள் முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு மீது சிலர் கல் வீசி தாக்­கு­தல் நடத்­தி­ய­தால் அங்கு பதற்­றம் ஏற்­பட்­டது.

திருப்­பதி நாடா­ளு­மன்றத் தொகு­தி­யில் எதிர்­வ­ரும் 17ஆம் தேதி இடைத்­தேர்­தல் நடக்­கிறது. அங்கு தெலுங்கு தேசம் கட்சி சார்­பில் பன­பாக லட்­சுமி கள­மி­றங்­கி­யுள்­ளார். அவரை ஆத­ரித்து கட்­சித் தலை­வர் சந்­தி­ர­பாபு நாயுடு நேற்று முன்­தி­னம் மாலை திருப்­பதி ரயில் நிலை­யம் அருகே பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டார்.

அங்­கி­ருந்து தொடங்­கிய ஊர்­வ­லத்­தி­லும் பங்­கேற்று அவர் நடந்து சென்­ற­போது திடீ­ரென சிலர் கல்­வீசி தாக்­கு­தல் நடத்­தி­னர்.

இதைக்­கண்டு கீழே குனிந்து கல்­வீச்­சில் இருந்து தப்­பித்­தார் சந்­தி­ர­பா­பு­ நா­யுடு. பின்னர் தாக்­கு­தலைக் கண்டித்து மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட அவரை போலிசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.