ஸ்ரீநகர்: சிற்றுந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
சிற்றுந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதிக்கு அருகே உள்ள ஆற்றில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்திய விமானப் படை, ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.