தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகா: படகு மீது கப்பல் மோதி 3 பேர் பலி; 9 பேர் மாயம்

2 mins read
e328db38-7ecb-4937-8b10-3f49b611d8f1
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லம் மங்­க­ளூரு அருகே குமரி மீன­வர்­களின் விசைப்­ப­டகு மீது வெளி­நாட்டு சரக்கு கப்­பல் மோதி­ய­தில் 3 பேர் உயி­ரி­ழந்­த­னர். இதில் 9 பேர் மூழ்கி மாய­மா­கி­யுள்­ள­னர்.

கேரள மாநி­லம் கோழிக்­கோடு அருகே உள்ள பேபூ­ரில் இருந்து 'ஐ.எஃப்.பி. ரபா' என்ற பட­கில் 14 மீன­வர்­கள் கடந்த வாரம் கட­லுக்கு மீன்­பி­டிக்க சென்­றுள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் அதி­காலை 2.30 மணி­ய­ள­வில் கர்­நா­டக மாநி­லம் மங்­க­ளூரு கடற்­க­ரை­யில் இருந்து 43 கடல் மைல் தொலை­வுக்கு அப்­பால் மீன் பிடித்­துக் கொண்­டி­ருந்த போது சிங்­கப்­பூ­ரில் இருந்து வந்த ஐ.பி.எல். என்ற சரக்கு கப்­பல், மீன­வர்­க­ளின் படகு மீது வேக­மாக மோதி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதில் படகு முற்­றி­லும் சேத­ம­டைந்து நீரில் மூழ்­கிய நிலை­யில், அதில் இருந்த 14 மீன­வர்­களும் காணா­மல் போயி­னர். இது குறித்து தக­வல் அறிந்­த­தும், மங்­க­ளூரு கட­லோர பாது­காப்பு படையினர் சம்­பவ இடத்­திற்கு விரைந்­த­னர்.

க‌ப்­பல், படகு மற்­றும் ஹெலி­காப்­டர் ஆகி­யவை மூலம் தேடி­ய­தில், 3 மீன­வர்­கள் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ள­னர். இறந்­த­வர்­களில் ஒரு­வர் பெயர் அலெக்­சாண்­டர் என்­றும் மற்­றொ­ரு­வர் பெயர் மாணிக் தாஸ் என்­றும் தெரிய வந்­துள்­ளது. மூன்­றாம் நப­ரின் அடை­யா­ளம் தெரி­ய­வில்லை.

மேலும் இரண்டு மீன­வர்­கள் மீட்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில், எஞ்­சிய 9 மீன­வர்­க­ளின் நிலை என்­ன­வா­னது என தெரி­ய­வில்லை. முதல்­கட்ட விசா­ர­ணை­யில், பட­கில் இருந்­த­வர்­களில் 7 பேர் தமி­ழ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தும் தலா 2 பேர் மேற்கு வங்­கம், அசா­மைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தும் தெரிய வந்­துள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.