உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொற்றால் பாதிப்பு

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொற்றால் பாதிப்பு

1 mins read
035f4dd3-9ce4-44aa-93d0-849c406ad063
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். இந்­தத் தக­வலை அவரே தனது டுவிட்­டர் பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளார். அவர் பதி­விட்ட டுவிட்­டர் செய்­தி­யில், "முதல்­வர் அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­றும் சில முக்­கிய அதி­கா­ரி­க­ளுக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­ட­தை­ய­டுத்து, நான் தனி­மைப்­ப­டுத்­திக்கொண்­டேன். தொற்று பரி­சோ­த­னை­யும் செய்­து­கொண்­டேன்," எனத் தெரி­வித்­தார்.

மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் முதல்­வர் ஆதித்­ய­நாத் தீவி­ரப் பிர­சா­ரம் மேற்­கொண்­டார். முன்­ன­தாக முதல்­வர் அலு­வ­லக அதி­காரி அபி­ஷேக் கவு­சிக் என்­ப­வ­ருக்குத் தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அதன்­பின் படிப்­ப­டி­யாக அனை­வ­ருக்­கும் தொற்று பர­வி­யது. இந்­நி­லை­யில் முதல்­வர் ஆதித்­ய­நாத் நேற்று டுவிட்­ட­ரில் பதி­விட்ட செய்­தி­யில், "சில அறி­கு­றி­கள் எனக்கு இருந்­த­தை­ய­டுத்து நான் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்­டேன். அதில் நான் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னது. தற்­போது நான் என்னைத் தனி­மைப்­ப­டுத்­திக்கொண்­டுள்ளேன்," எனத் தெரி­வித்­துள்­ளார். உத்­த­ரப் பிர­தே­சத்­தி­லும் கொவிட்-19 இரண்­டா­வது அலை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. அங்கு நேற்று மட்­டும் 18,000க்கும் மேற்­பட்­டோர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.