போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுடுகாடுகளில் தகனம் செய்வதற்காக ஏராளமான சடலங்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அரசு வெளியிடும் புள்ளி விவரங்களுக்கும் இந்த மரணங்களுக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
தொற்று மரண எண்ணிக்கையை மத்திய பிரதேச மாநில அரசு குறைத்துக் கூறுவதாக மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். போபாலில் உள்ள பட்படா தகன மையத்தில், திங்கட்கிழமை மட்டும் 37 சடலங்கள் தகனம் செசெய்யப்பட்டுள்ளன. எனினும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் மாநிலம் முழுவதும் 37 பேர் தொற்று பாதிப்பால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஐந்து நாட்களின் புள்ளிவிவரங்களும் முரணாக உள்ளன.
ஆனால் கொரோனா மரணங்களை மறைப்பதாக எழுந்த குற்றச்சாட்டை ம.பி. மாநில அரசாங்கம் மறுத்துள்ளது.

