ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரின் கங்கை நதிக்கரையில் கடந்த 1ஆம் தேதி முதல் கும்ப மேளா திருவிழா நடைபெற்று வருகிறது. 30ஆம் தேதி வரை கும்ப மேளா நடைபெற உள்ளது. ஏப்ரல் 12, 14 மற்றும் 27 ஆகிய தேதிகள் புனித நீராடலுக்கு முக்கிய நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், துறவிகள் மற்றும் அகோரிகள் புனித நீராடக் குவிந்தனர்.
இந்நிலையில், ஹரித்துவாரில் மட்டும் கடந்த 2 நாட்களில் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை 408 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 594 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1900க்கும் மேல் பதிவாகிறது.
உத்தரகாண்டில் இதுவரை 1.12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,780 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.