இந்தியா, பாகிஸ்தான் ரகசிய பேச்சுவார்த்தை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்றது

இந்தியா, பாகிஸ்தான் ரகசிய பேச்சுவார்த்தை காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்றது

3 mins read
b147fb0b-f88d-4724-82df-20268694568d
-

புது­டெல்லி: காஷ்­மீர் பிரச்­சினை தொடர்­பாக இந்­திய, பாகிஸ்­தான் உள­வுத்­து­றை­க­ளின் உயர் அதி­கா­ரி­கள் கடந்த ஜன­வரி மாதம் ரக­சி­யப் பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்­ட­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ர­சின் ஏற்­பாட்­டில் இந்­தப் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த 70 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இந்­தியா, பாகிஸ்­தான் இடையே காஷ்­மீர் விவ­கா­ரம் தொடர்­பாக மோதல் நீடித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் கடந்த 2019ஆம் ஆண்டு இந்­திய பாது­காப்­புப் படை­யி­னர் மீது நடத்­தப்­பட்ட தற்­கொ­லைத் தாக்­கு­த­லில் பல வீரர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

பாகிஸ்­தா­னில் உள்ள தீவி­ர­வா­தி­கள்­தான் இத்­தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக இந்­திய தரப்­பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டது. இத­னால் இரு­த­ரப்­புக்­கும் இடை­யே­யான தூத­ரக உற­வு­கள், வர்த்­த­கத் தொடர்­பு­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் காஷ்­மீ­ருக்கு வழங்­கப்­பட்ட சிறப்பு அந்­தஸ்தை இந்­திய அரசு நீக்­கி­ய­தற்கு பாகிஸ்­தான் கடும் அதி­ருப்தி தெரி­வித்­தது. இத­னால் இரு தரப்­புக்­கும் இடை­யே­யான மோதல் போக்கு மேலும் வலுத்­தி­ருப்­ப­தாக அனைத்­து­லக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­தி­னர்.

இந்­நி­லை­யில் இந்­தி­யா­வின் 'ரா', பாகிஸ்­தா­னின் 'ஐஎஸ்ஐ' உளவு அமைப்­பு­க­ளைச் சேர்ந்த உயர் அதி­கா­ரி­கள் கடந்த ஜன­வரி மாதம் காஷ்­மீர் பிரச்­சினை குறித்து பேச்சு­வார்த்தை நடத்தி உள்­ள­னர்.

ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ர­சின் ஏற்­பாட்­டில் இந்­தப் பேச்­சு­வார்த்தை துபா­யில் நடை­பெற்­றுள்­ள­தாக ஊடகச் செய்தி தெரி­விக்­கிறது.

கடந்த பல மாதங்­க­ளாக இந்த இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை மூன்­றாம் நாடு­களில் நடை­பெற்று வரு­வ­தாக பாகிஸ்­தா­னைச் சேர்ந்த பாதுகாப்புத்­துறை ஆய்­வா­ளர் ஆயிஷா சித்­திக் கூறி­யுள்­ளார்.

"துபாய் தவிர லண்­டன், தாய்­லாந்­தில் பேச்­சு­வார்த்தை நடந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­கிறது. கடந்த காலங்­க­ளி­லும் இது­போன்ற பேச்­சுக்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன என்­றா­லும் நெருக்­க­டி­யான கால­கட்­டங்­க­ளி­லேயே அதற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் நில­வின. மேலும் அப்­பேச்­சு­வார்த்­தை­கள் குறித்து வெளிப்­ப­டை­யாக ஒப்­புக்­கொள்­ளப்­ப­ட­வில்லை," என்­கி­றார் ஆயிஷா சித்­திக்.

எனி­னும் பேச்­சு­வார்த்­தைக்­குப் பிற­கும் பல விஷ­யங்­கள் தவ­றாக நடக்­கும் வாய்ப்­புள்­ளது என்று விவ­ரம் அறிந்த ஒரு­வர் தெரி­வித்­த­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி முகமை வெளி­யிட்­டுள்ள செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக இந்தியா, சீனா இடையே எல்­லைப் பிரச்­சினை நிலவி வரு­கிறது. இரு­தரப்­பும் எல்­லை­யில் அண்­மை­யில் மோதிக் கொண்­ட­தில் சில வீரர்­களை இழந்துள்­ளன.

இத்­த­கைய சூழ­லில் மற்­றொரு எல்­லைப் பகு­தி­யில் பாகிஸ்­தா­னு­ட­னான மோதலை வலுப்­ப­டுத்த இந்­தியா விரும்­பாது என பாது­காப்பு நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.

இதே போல் கடும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்­ள­தால் பாகிஸ்­தா­னும் எல்­லைப் பதற்­றத்­தைக் குறைத்து, பொரு­ளி­யல் மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­களில் முனைப்பு காட்­டவே விரும்­பும் என்­றும் அந்­நி­பு­ணர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

மேலும் ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து வீரர்­களை மீட்­டுக்­கொள்­ளும் அமெ­ரிக்­கா­வின் முடி­வும் பாகிஸ்­தா­னுக்கு சிக்­கலை ஏற்­ப­டுத்­தும் என்­றும் ஆப்­கா­னிஸ்­தா­னு­ட­னான எல்­லைப் பகு­தி­யில் தன்னை வலுப்­ப­டுத்­திக்கொள்ளவே பாகிஸ்­தான் முன்­னு­ரிமை அளிக்­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

"இத்­த­கைய சூழ­லில் இந்­தி­யா­வும் பாகிஸ்­தா­னும் பேச்­சு­வார்த்தை நடத்­தா­மல் இருப்­பது எந்­தப் பல­னை­யும் அளிக்­காது. இரு­த­ரப்­பும் இதை உணர்ந்­தி­ருக்­கும்.

"மேலும் எந்­த­வித விளம்­ப­ர­மும் இல்­லா­மல் நடத்­தப்­படும் பேச்­சு­வார்த்தை அதிக பலன் கொடுக்­கும்," என்­கி­றார் ராய்ட்­டர்ஸ் செய்தி முக­மை­யின் முன்­னாள் செய்­தி­யா­ள­ரான மைரா மெக் டொனால்ட்.

ஜன­வரி மாதம் நடந்த பேச்­சு­வார்த்­தையை அடுத்து எல்லை தாண்டி நடத்­தப்­படும் துப்­பாக்­கிச்­சூட்டை நிறுத்­து­வ­தற்கு இரு­த­ரப்­பும் முன்­வந்­துள்­ள­தா­க­வும் தங்­கள் கட்­டுப்­பாட்­டில் உள்ள காஷ்­மீர் பகு­தி­களில் தேர்­தலை நடத்த இரு­தரப்­பும் ஒப்­புக்­கொண்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.