நாட்டு மக்களைப் பிரித்தாளும் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டு மக்களைப் பிரித்தாளும் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

2 mins read
8c36b719-5f13-4e92-a131-a40fb309b29e
-

கோல்­கத்தா: மத்­தி­யில் ஆளும் பாஜக, மதம், சாதி, மொழி­க­ளின் அடிப்­ப­டை­யில் நாட்டு மக்­களைப் பிரிப்­ப­தாக காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி குற்­றம்­சாட்டி உள்­ளார்.

வெறுப்பு, வன்­முறை, பிரித்­தா­ளும் அர­சி­யல் ஆகி­ய­வற்­றைத் தவிர பாஜ­க­வால் நாட்டு மக்களுக்கு வேறு எதை­யும் தர இய­லாது என்று தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது அவர் குறிப்­பிட்­டார்.

மேற்கு வங்க மாநி­லத்­தில் எட்டு கட்­டங்­க­ளாக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெ­று­கிறது. முதல் நான்கு கட்ட தேர்­தல்­கள் நடந்­த­போது ராகுல் காந்தி பிர­சா­ரத்­தில் ஈடு­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் உத்­தர் தினஜ்­பூர் மாவட்­டத்­தில் நடை­பெற்ற பிர­சா­ரக் கூட்­டத்­தில் அவர் பங்­கேற்­றார்.

அப்­போது 'பொன்­னான மேற்கு வங்­கம்' என்று பாஜக முன்­வைக்­கும் முழக்­கம் வெறும் கானல் நீரைப் போன்­றது என ராகுல் விமர்­சித்­தார்.

"இதற்கு முன்பு திரி­ணா­முல் காங்­கி­ர­சுக்கு வாய்ப்­ப­ளித்­தீர்­கள். ஆனால் அக்­கட்சி தோற்­று­விட்­டது.

"நாங்­கள் ஒரு­போ­தும் பாஜக, ஆர்­எஸ்­எஸ் அமைப்­பு­டன் கூட்­டணி வைப்­ப­தில்லை. அர­சி­யல் ரீதி­யாக மட்­டு­மல்­லா­மல் சித்­தாந்த ரீதி­யா­க­வும் போராடி வரு­கி­றோம்," என்று ராகுல் காந்தி தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே மேற்கு வங்­கத்­தில் கொரோனா தொற்று பரவ பாஜ­க­வி­னர் தான் கார­ணம் என்று முதல்­வர் மம்தா சாடி­யுள்­ளார்.

கிரு­மித்­தொற்றை மேற்கு வங்­கத்­தில் பரப்­பிய பின்­னர் பாஜ­க­வி­னர் அங்­கி­ருந்து ஓட்­டம் பிடித்­து­விட்­ட­னர் என்­றும் அவர் பிர­சா­ரத்­தின்­போது குறிப்­பிட்­டார்.

முதல்­வர் மம்­தா­வின் இந்­தக் குற்­றச்­சாட்டு தமக்கு பெரும் அதிர்ச்சி அளிப்­ப­தாக மத்­திய அமைச்­சர் ஸ்மி­ருதி இரானி கூறி­யுள்­ளார். மேற்கு வங்­கத்­தில் நாளை ஐந்­தாம் கட்­டத் தேர்­தல் நடை­பெற உள்­ளது.