புதுடெல்லி: 'எஸ்-400' ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இந்தியா வும் ரஷ்யாவும் உறுதியாக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா ராணுவத் தளவாடங்களை வாங்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொருளாதாரத் தடை என்பது மிரட்டல், சட்டவிரோத ஆயுதம் என்று ரஷ்ய தூதர் சாடியுள்ளார்.

