விஞ்ஞானி வழக்கு: சிபிஐக்கு உத்தரவு

விஞ்ஞானி வழக்கு: சிபிஐக்கு உத்தரவு

1 mins read
50b2534f-d338-403a-a462-30b89baf7581
நம்பி நாராயணன். படம்: தகவல் ஊடகம் -

புதுடெல்லி: இஸ்‌ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை கேரள போலிசார் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1994ஆம் ஆண்டு இஸ்‌ரோவில் பணியாற்றியபோது ராக்கெட் வடிவமைப்பு தொடர்பான ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இதை­ய­டுத்து ஐம்­பது நாள்­கள் சிறை­யில் அடைக்­கப்­பட்ட அவர், பின்­னர் சிபிஐ விசா­ர­ணை­யின் மூலம் குற்­ற­மற்­ற­வர் என நிரூ­பிக்­கப்­பட்டு விடு­த­லை­யா­னார்.

விசா­ர­ணை­யின் போது தாம் போலி­சா­ரால் சித்­ர­வதை செய்­யப்­பட்­ட­தாக கூறிய நம்பி நாரா­ய­ணன், தம்­மைக் கைது செய்த மூன்று போலிஸ் அதி­கா­ரி­கள் மீது உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­தார்.

இந்த வழக்­கில் அவ­ருக்கு கேரள அரசு ஐம்­பது லட்­சம் ரூபாய் இழப்­பீடு வழங்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

மேலும் மூன்று கேரள காவல்­துறை அதி­கா­ரி­கள் மீது எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்கை தொடர்­பாக மூன்று மாதங்­களில் விசா­ரித்து அறிக்கை அளிக்க வேண்­டும் என சிபிஐ இயக்­கு­ந­ருக்கு உச்ச நீதி­மன்­றம் நேற்று முன்­தி­னம் உத்­த­ர­விட்­டுள்­ளது.