புதுடெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததை ஐக்கிய அமீரக சிற்றரசு உறுதி செய்துள்ளது.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை உதவியதாக அமெரிக்காவுக்கான ஐக்கிய அமீரக சிற்றரசின் தூதர் யூசப் அல் ஒடைபா கூறியுள்ளார்.
எனினும் இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
"அண்மைய பேச்சுக்களால் இரு நாடுகளும் நெருங்கிய கூட்டாளிகளாக மாறப்போவதில்லை. எனினும் குறைந்தபட்ச பேச்சுவார்த்தையேனும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியுள்ளது," என்று யூசப் தெரிவித்துள்ளார்.
இந்திய, பாகிஸ்தான் உளவு அமைப்புகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் துபாயில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

