இருமுறை 'உயிரிழந்த' கொரோனா நோயாளி

இருமுறை 'உயிரிழந்த' கொரோனா நோயாளி

1 mins read
18eb727d-e496-4b27-bcd3-df153cd00fb5
-

போபால்: மத்­தி­யப்பிர­தேச மாநி­லம் விதி­ஷா­வில் உள்ள அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் கோரே­லால் கோரி என்ப­வர் கடந்த 12ஆம் தேதி அனு­

ம­திக்­கப்­பட்­டார். அவ­ருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. மறு­நாள் அவர் இறந்­து­விட்­ட­தாக மருத்­து­வ­ம­னை­யில் இருந்து தெரி­விக்­கப்­பட்­ட­தாக அவ­ரது மகன் கைலாஷ் கோரி கூறி­னார். சிறிது நேரத்­தி­லேயே அவர் உயி­ரி­ழக்­க­வில்லை என்று தக­வல் வந்­த­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"பிறகு அன்று மாலை­யில் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து மீண்­டும் ஒரு­முறை தொலை­பேசி அழைப்பு வந்­தது. அதில் எனது தந்தை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தால் உட­ன­டி­யாக அறுவை சிகிச்சை செய்ய வேண்­டும் என்று சொன்­னார்­கள்.

"பின்னர் இரவு 8.30 மணி­ய­ள­வில் அறுவை சிகிச்சை செய்­யும் போதே அவர் இறந்­து­விட்­ட­தா­கவும் கொரோனா நோயாளி என்­ப­தால் உடலை ஒப்­ப­டைக்க முடி­யாது என்­றும் கூறிய மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் வெள்­ளிக்­கி­ழமை காலை மயா­னத்­துக்கு வரும்­படி தெரி­வித்­த­னர்.

"நாங்­கள் மயா­னம் சென்­ற­போது வேறு ஒரு குடும்­பத்­தி­னர் அங்கு இறு­திச்சடங்­கு­கள் செய்து கொண்­டி­ருந்­த­னர். அப்­போது அங்­கி­ருந்த மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் எனது தந்தை உயி­ரோடு கவ­லைக்­கி­ட­மான நிலையில் இருப்­ப­ தா­கக் கூறி­னர்," என்­றார் கைலாஷ்.

இது குறித்து மருத்­து­வக் கல்­லூரி முதல்­வர் சுனில் நந்­தேஷ்­வர் கூறு­கை­யில், கோரே­லா­லின் இத­யத் துடிப்பு சற்று நேரம் நின்­ற­தால் அங்­கி­ருந்த தாதி அவ­ச­ரப்­பட்டு தக­வல் கொடுத்­த­தா­க­வும் அவ­ருக்கு சிகிச்சை தொடர்ந்து கொண்­டி­ருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.