அசன்சோல்: மே 2ஆம் தேதிக்குப் பிறகு மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் முதல்வர் ஆகிவிடுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலையொட்டி அசன்சோல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.
"வங்காள புத்தாண்டுக்குப் பிறகு இதுதான் எனது முதல் பொதுக்கூட்டம். நான்கு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் பயந்து போயுள்ளது. பிணங்களை வைத்து மம்தா பானர்ஜி அரசியல் நடத்துகிறார். மே 2ஆம் தேதிக்குப் பிறகு மம்தா பானர்ஜி 'முன்னாள் முதல்வர்' என்ற பட்டத்தைப் பெற்று விடுவார்," என்று மோடி குறிப் பிட்டார்.
"உங்கள் வாக்கு திரிணாமுல் காங்கிரசை ஆட்சியில் இருந்து இறக்குவதுடன் மாபியா ராஜ்யத்தையும் நீக்கி விடும். அதுதான் உங்கள் வாக்கின் வலிமை. மேற்கு வங்காளத்துக்கு தேவை இரட்டை என்ஜின் அரசுதான். வளர்ச்சியை தடுக்கும் அரசு அல்ல. கடந்த 10 ஆண்டு களாக வளர்ச்சியைத் தடுத்து அவர் துரோகம் செய்துள்ளார். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங் களுக்கும் மேற்கு வங்காள மக்களுக்கும் இடையே அவர் சுவர் போல் நின்று கொண்டார். இதனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களைப் பறித்துக்கொண்டார்.
மக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீட்டை அளிக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால், மம்தா சுவராக நின்று கொண்டார்.
முத்தலாக்கில் இருந்து முஸ்லிம் பெண்களை விடுவிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. மம்தா கோபம் அடைந்தார்.
இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதையும் எதிர்த்தார். முன்பெல்லாம் வேலை தேடி மக்கள் அசன்சோல் நகருக்கு வருவார்கள். அந்த அளவுக்கு எல்லா தொழிற்சாலைகளையும் இங்கே பார்க்க முடியும். ஆனால், இப்போது இங்குள்ள மக்கள் வேலை தேடி வேறு நகருக்குச் செல்கிறார்கள். திரிணாமுல் காங்கிரசின் மோசமான நிர்வாகமே இதற்குக் காரணம்," என்று பிரதமர் மோடி சாடினார்.
இதற்கிடையே மேற்கு வங்காள 5ஆம் கட்டத் தேர்தலில் சுமார் 78.36% விழுக்காடு வாக்குப் பதிவாகியுள்ளது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
ஏற்கெனவே நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் சனிக்கிழமை அன்று 5ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
இதில் 45 சட்டசபைத் தொகுதி களுக்கான தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

