டெல்லி: இந்திய அமைச்சர்கள் பலர் இரண்டாவது கிருமிப் பரவலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் தங்களுடைய பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு, கொரோனா கிருமி 2வது அலையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தான் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். தனது அன்றாடப் பணிகளை எப்போதும்போல மேற்கொண்டு வரு வதாகவும் அவர் சொன்னார்.
2வது முறையாக இதுபோல கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் யாரும் அது பற்றி பயப்படாமல் ஆரோக்கியமான உணவை உண்டு ஓய்வு எடுத்தாலே கிருமியின் தாக்கம் நின்று விடும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் இரு முதல்வர்கள் உட்பட பல அமைச்சர்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பாதிக்கப் பட்ட முதல்வர்கள் ஆவர்.

