இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

1 mins read
383b1c4e-0e0e-47bd-9081-b53d7d11e3f6
-

புது­டில்லி: இந்­தி­யா­வி­லி­ருந்து மருந்துப் பொருட்­க­ளின் ஏற்­று­மதி அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த நிதி­யாண்­டில் மருந்து நிறு­வ­னங்­க­ளின் ஏற்­று­மதி 18 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது.

கிட்­டத்­தட்ட 1.83 லட்­சம் கோடி ரூபாய் அள­வுக்கு ஏற்­று­மதி நடந்­துள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்கு முந்­தைய நிதி­யாண்­டில், 1.54 லட்­சம் கோடி ரூபாய் அள­வுக்கே ஏற்­று­மதி செய்­யப்­பட்­டது.

இது குறித்து மேலும் தக­வல் தெரி­வித்த இந்­திய மருந்­து­கள் ஏற்­று­மதி மற்­றும் மேம்­பாட்டு மன்­றம், அண்­மைக்­கா­ல­மாக மருந்­து­கள் ஏற்­று­மதி அதி­க­ரித்து வரு­கிறது. குறிப்­பாக கடந்த நிதி­யாண்­டில் மார்ச் மாதத்­தில் மிக அதி­க­ள­வில் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த மாதத்­தில் மட்­டும் 48.5 விழுக்­காடு அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது என்று குறிப்­பிட்­டது.

உலக மருந்து சந்­தை­கள் ஒன்று முதல் 2 விழுக்­காடு அள­வுக்கு வீழ்ச்சி கண்ட சூழ்­நி­லை­யில் அவற்­றுக்கு மாறாக இந்­திய மருந்­து­க­ளுக்­கானத் தேவை­ அதி­க­ரித்து உள்­ளது.

வரும் ஆண்­டு­களில் தடுப்பு ஊசி ஏற்­று­மதி கார­ண­மாக இந்­தி­யா­வில் நல்ல வளர்ச்சி காணப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும் உற்­பத்­தி­யு­டன் இணைந்த ஊக்­கச்­ச­லுகை திட்­டம் கார­ண­மா­க­வும் வளர்ச்சி மேலும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வி­லி­ருந்து வட அமெ­ரிக்­கா­வுக்கு அதி­க­ள­வில் ஏற்­று­மதி நடை­பெற்­றுள்­ளது.

இந்த ஏற்­று­மதி மட்­டும் கிட்­டத்­தட்ட 34 விழுக்­காடு ஆகும் மன்றம் மேலும் தெரிவித்தது.