கொரோனா: தயார்நிலையில் 4,002 ரயில் பெட்டிகள்

கொரோனா: தயார்நிலையில் 4,002 ரயில் பெட்டிகள்

2 mins read
24356aa3-ef0c-481a-aea1-a796e3fe930e
சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட ரயில் பெட்டி. படம்: ஊடகம் -

தொற்றுப் பரவலைத் தடுக்க ஐந்து அம்ச வழிமுறைகள்: மோடிக்கு மன்மோகன் கடிதம்

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தங்­க­வைத்து சிகிச்சை அளிக்க நான்­கா­யி­ரம் ரயில் பெட்­டி­கள் தயார்நிலை­யில் உள்­ளன.

நாடு முழு­வ­தும் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் கொரோனா நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்க போது­மான படுக்­கை­கள் இல்லை. எனவே ரயில் பெட்­டி­கள் கொரோனா சிகிச்சை அளிக்­கும் வார்­டு­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றன.

மொத்­தம் 4,002 ரயில் பெட்டி­கள் கொரோனா சிகிச்சை அளிப்­ப­தற்கு ஏற்ப தயார்நிலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­திய ரயில்வே துறை தெரி­வித்­துள்­ளது என 'தினத்­தந்தி' நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

16 ரயில்வே மண்­ட­லங்­களில் இப்பெட்­டி­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் மாநில அர­சு­க­ளின் தேவைக்­கேற்ப அவை வழங்­கப்­படும் என்­றும் ரயில்வே துறை கூறி­யுள்ளது.

"இந்த நட­வ­டிக்­கை­யால் தொற்று உறுதி செய்­யப்­பட்ட நோயா­ளி­க­ளை­தனி­மைப்­ப­டுத்தி வைக்­கும் வச­தி­கள் அதி­க­ரிக்­கும் என்று ரயில்வே துறை தெரி­வித்­துள்­ளது.

கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஐந்து அம்ச வழி­மு­றை­க­ளைக் குறிப்­பிட்டு பிர­த­மர் மோடிக்கு முன்­னாள் பிர­த­மர் மன்­மோ­கன் சிங் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

உள்­நாட்­டில் தடுப்­பூசி உற்­பத்தி குறை­வாக உள்­ள­தால், ஐரோப்­பிய அல்­லது அமெ­ரிக்க மருத்­துவ நிறு­வ­னம் ஒப்­பு­தல் வழங்­கிய மருந்­து­களை, எந்­தத் தடை­யும் இன்றி இறக்­கு­மதி செய்ய மத்­திய அரசு அனு­ம­திக்க வேண்­டும் என மன்­மோ­கன் சிங் வலி­யு­றுத்தி உள்­ளார்.

கணிக்க முடி­யாத அவ­சர நிலையை நாடு எதிர்­கொண்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், அவ­சர காலத்­தில் இவ்­வாறு செய்­வதை நிபு­ணர்­கள் ஏற்­றுக் கொள்­வார்­கள் எனக் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே மன்­மோ­கன் சிங்­கின் கடி­தத்­துக்கு மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்ஷ் வர்­தன் பதி­லடி கொடுத்­துள்­ளார்.

"கொரோ­னா­வுக்கு எதி­ரான போரில் தடுப்­பூ­சி­க­ளின் முக்­கி­யத்­து­வம் குறித்து நீங்­கள் நன்கு புரிந்­து­கொண்­டுள்ள நிலை­யில் உங்­கள் கட்­சி­யின் பொறுப்­பு­மிக்க பத­வி­களில் இருப்­ப­வர்­களும் உங்­கள் கட்­சி­யின் ஆட்சி நடை­பெ­றும் மாநி­லங்­களும் உங்­கள் கருத்­தைப் பகிர்ந்­து­கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை," என்று ஹர்ஷ் வர்­தன் குறிப்­பிட்­டுள்­ளார்.

விஞ்­ஞா­னி­க­ளுக்­கும் தடுப்­பூசி உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்து காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­கள் இது­வரை ஒரு வார்த்­தை­கூட கூறாதது தமக்கு அதிர்ச்சி அளிப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.