கொரோனாவுக்கு அஞ்சவில்லை: போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் அறிவிப்பு

கொரோனாவுக்கு அஞ்சவில்லை: போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் அறிவிப்பு

2 mins read
55fd4aa0-3047-45ec-900d-4c69592b5965
-

புது­டெல்லி: கொரோனா தொற்­றுப் பர­வ­லைக் கண்டு அஞ்­ச­வில்லை என்­றும் தங்­க­ளது போராட்­டம் நீடிக்­கும் என்­றும் விவ­சா­யி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தங்­கள் மீது உண்­மை­யான அக்­கறை இருக்­கும் பட்­சத்­தில் கொரோனா தடுப்­பூசி போட்­டுக் கொள்ள விவ­சா­யி­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும் என அவர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

புதிய வேளாண் சட்­டங்­க­ளைத் திரும்­பப் பெற வலி­யு­றுத்தி விவ­சா­யி­கள் டெல்­லி­யில் நடத்தி வரும் போராட்­டம் 200 நாள்­களை எட்­டி­யுள்­ளது. டெல்லி உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் நில­வும் கடும் வெயி­லை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் விவ­சா­யி­கள் போராடி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் போராட்­டத்­தைக் கைவி­டப்போவ­தில்லை என்று சம்­யுக்தா கிஷான் மோட்சா என்ற அமைப்­பின் தலை­வர் தர்­‌ஷன் பால் தெரி­வித்­துள்­ளார்.

விவ­சா­யி­கள் மீது மத்­திய அரசு அக்­கறை காட்ட வேண்­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­திர சிங் தோம­ரு­டன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­யில் எந்­த­வித உடன்­பா­டும் ஏற்­ப­ட­வில்லை என்று அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே பஞ்­சாப், ஹரி­யானா மாநில விவ­சா­யி­கள் நாளை புதிய போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­துள்­ள­னர்.

"கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் அபாய கட்­டத்தை எட்­டி­யுள்­ளதை அறி­வோம். எனி­னும் கும்­ப­மேளா, மேற்கு வங்­கத் தேர்­தல் பிர­சா­ரங்­களில் ஆயி­ரக்­கணக்­கா­னோர் கூடு­கின்­ற­னர்.

"எனவே போராட்­டக் களத்­தில் இருந்து விவ­சா­யி­கள் வெளி­யேற வேண்­டும் என்று கூறப்­ப­டு­வதை ஏற்க இய­லாது. நாங்­கள் அனைத்­து­வித முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்­வோம்.

"அதன் பிற­கும் எங்­கள் மீது தாக்­கு­தல் நடந்­தால் அதை எதிர்­கொள்­ளத் தயார்," என்று மற்­றொரு விவ­சாய சங்­கத்­தின் பொதுச்­செ­ய­லா­ள­ரான சுக்­தேவ் சிங் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.